2011 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகப் கோப்பை



2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பாகிஸ்தான் நடத்த இருந்த ஆட்டங்களில் 8 போட்டிகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்தியா-பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் இணைந்து நடத்த தீர்மானிக்கப்பட்டது.

எனினும் பாகிஸ்தானில் இலங்கை அணி மீது தாக்குதல் நடத்தப் பட்டதை அடுத்து அந்நாட்டில் நடைபெறவிருந்த உலகக் கோப்பை ஆட்டங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ரத்து செய்தது.

இந்நிலையில், உலகக் கோப்பை மத்திய நிர்வாகக் குழு நேற்று மும்பையில் ஆலோசனை நடத்தியது. இந்தஆலோசனை கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட 14 போட்டிகளில் 8 போட்டி இந்தியாவுக்கு வழங்கப்பட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

எஞ்சிய போட்டிகள் வங்கதேசம் மற்றும் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான பரிந்துரை கிரிக்கெட் கவுன்சிலிடம் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.

மேலும் உலகக் கோப்பைக்கான தலைமைச் செயலகம் மும்பையில் செயல்படவும் இந்த கூட்டம் பரிந்துரைத்துள்ளது. உலகக் கோப்பையில் இந்தியா மொத்தம் 29 போட்டிகளை நடத்த உள்ளது. இலங்கை 12 போட்டி களையும், வங்கதேசம் 8 போட்டி களையும் நடத்த உள்ளன.

World Cup logos



பாதுகாப்பு காரணங்களுக்காக இப்படியும் ஆடும் காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.