மனித உயிர் மகத்தானதா? மலிவானதா?

இன்று நாமெல்லாம் ஒட்டு மொத்தமாகப் புலம்பிக் கொண்டிருக்கும் பொதுவான விஷயம் தமிழ்ப் பண்பாடு மாறிக்கொண்டு வருகிறது.
இந்தியக் கலாச்சாரம் சீரழிந்து வருகிறது என்பதுதான். ஆனால் உலகமெங்கும் இன்று நல்ல குணங்கள், நல்ல பண்புகள், மனிதநேயம், மன்னிக்கும் தன்மை இவையெல்லாம் மிகவும் குறைந்து வருவதை நாம் உணரமுடிகிறது.

நல்ல காரியங்கள் நான்கு நடக்குமுன்பு நாற்பது தீய காரியங்கள் மிகவும் வேகமாக நடந்தேறிவிடுகின்றது. அதுவும் வெட்டுவது குத்துவது என்பதெல்லாம் சர்வ சாதாரண விஷயமாகிவிட்டது. நாய் சேகர் மாமா மாதிரி ‘எல்லோரும் கேளுங்கள். நான் கொலை செய்யப் போறேன். கொலை செய்யப் போறேன்.’ என்று அறிவிப்பு செய்து நடத்தும் நிகழ்ச்சியாகி விட்டது. அப்படியென்ன மனித உயிரின் மதிப்பு மலிவாகிவிட்டதா?

இப்படிக் கொடூர நிகழ்ச்சிகள் நடக்கும் சமயத்தில் அந்தப்பகுதியில் பார்த்தால் ‘என்ன கொடுமை சார் இது’ என்று ஆதங்கம்படும் அஹிம்சாவாதிகளாக நிறையப் பேர் மாறிவிடுவார்கள். ஆனால் மறுநாள் அதே அஹிம்சாவாதிகள் ‘நாட்டில் இதெல்லாம் சகஜமப்பா..’ என்று (ஏதாவது சொல்லி தனது தலைக்கு ஆபத்து வந்துவிடக்கூடாதே) கையை வீசிக்கொண்டு காரியத்தைப் பார்க்கப் போய்விடுவார்கள்.
இப்படி சமுதாயத்தில் எந்த தீய செயல்கள் நடந்தாலும் பாவப்படுவதும் பரிதாபப்படுவதுமே இந்த சமூகத்தினரின் கடமையாகிவிட்டது. இப்படிப்பட்ட செயல்கள் ஏன் நடக்கிறது? என்று சிந்தித்துப் பார்க்க யாரும் விரும்பவில்லை.

சமுதாயம் என்பதில் நாம் எல்லோரையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்க முடியாது. வேலை வெட்டியின்றி வீண் விவாதங்களில் ஈடுபடும் ஒரு சமூகம் இருக்கிறது. இதற்காக பல நாடுகளில் பல நிறுவனங்கள் ஒரு குழுவை அமைத்து அவர்களை விவாதிக்கச் செய்து அதை தொலைக் காட்சியிலும் ஒளிபரப்புவார்கள். அந்த விவாதங்கள் பெரும்பாலும் நடந்து முடிந்த நிகழ்ச்சிகளைப் பற்றியதாகத்தான் இருக்கும்.

சில வருடங்களுக்கு முன்பு இப்படி விவாதத்திற்கு வந்த விஷயம் மூன்றாம் உலகப் போர் வருமா? வராதா? அவரவர் நாட்டின் நாணயங்களை விரல் வலிக்கச் சுண்டிப்போட்டு விவாதித்தார்கள். (ஒரு வேளை நாணயம் நட்டுக்கு நின்றிருந்தால்.. அதற்காக தனி ஓவர் டைம் எடுத்து விவாதித்திருப்பார்களோ!.) இந்த விவாதத்தில் நாஸ்டர்டாமின் ஆருடத்தையும் பக்கபலமாக அமர்த்திக் கொண்டார்கள்.

சரி ஒருவேளை நாணயத்தில் தலை விழுந்து இவர்கள் விவாதப்படி மூன்றாம் உலகப்போர் என்ற ஒன்று வருகிறதோ! இல்லையோ! (வராமல் இருக்க இறைவனை வேண்டுவோம். மீண்டும் ஒருமுறை பூமித்தாயின் சரீரம் களங்கமடைய வேண்டாமே) இன்று உலகமெங்கும் தீவிரவாதம் என்னும் பேர்வையில் தினம் தினம் போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

‘இன்று என்ன கொடூரக் காட்சிகளைக் காணவேண்டி இருக்குமோ’ என்று என்ணி காலையில் உதிக்கும் சூரியன்கூட யோசனை செய்துதான் மேலெழும்பி வருகிறது. அதே சூரியன் அந்திவானில் மறையும்பொழுது அந்தச் செவ்வானம் சிவக்கிறதோ இல்லையோ பூமித்தாயின் சரீரம் செந்நிறக் குருதியால் நித்தம் நித்தம் சிவந்து கொண்டல்லவா இருக்கிறது!.

இந்த சமூகத்தைச் சீரழிக்கும் இப்படிப்பட்ட நீசர்களின் கொடூரப் பயணம் எதை நோக்கியது. எந்த தேசத்தை ஆள்வதற்கு? எந்த மக்களை ஆள்வதற்கு? இல்லை இவர்கள் மட்டும் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்துவிடப் போகிறார்களா? இதற்கெல்லாம் விடை அவர்களுக்கே தெரியாது.

ஒரு வேளை லட்சக்கணக்கான உயிர்களைக் கொன்று பல நாடுகளைச் சீரழித்து கொள்ளையடித்து, ‘சக்கரவர்த்திகள்’ ‘மாமன்னர்கள்’ என்று சரித்திரத்தில் இடம் பிடித்தவர்களைப் போல் (இவர்களைக் கொடூரர்களாகச் சித்திகரித்து இருக்கலாம்) இவர்களும் இடம் பிடித்து விடலாம் என்று எண்ணுகிறார்களா.

பிடித்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. காரணம் திறமை, நேர்மை, உண்மை என்ற நல்ல பண்புகளைவிட பணம் திடமானது. (சரித்திரம் எழுதுபவர்கள் ஜாக்கிரதை. அமெரிக்கர்கள் முதன்முதலில் சந்திரனுக்குச் சென்றது உண்மையா? பொய்யா? என்று சர்ச்சையைக் கிளப்பிவிட்டது போல் இந்த சரித்திரமும் சர்ச்சையாகிவிடப் போகிறது. நம்மைவிட நமது சந்ததியினர் உஷார் பார்ட்டிகள்.)

மீண்டும் கேள்விக்கு வருவோம். மனித உயிர் மலிவானதா? மகத்தானதா? இதற்காகப் பட்டி மன்றம் வைத்தால் பின்லேடனும் ஜார்ஜ் புஷ்ஷ_ம் ஒரே அணியில் சேர்ந்து விடுவார்கள். எதிரணிக்குத்தான் ஆள் தேட வேண்டும். அந்தப் பொறுப்பை நடுவர் சாலமன் பாப்பையா அவர்களிடம் விட்டுவிடுவோம். ஆனால் தீர்ப்பு மட்டும் ‘மனித உயிரின் விலை விலைவாசியைப் போல் உயர உயரப் பறக்கிறது’ என்பதாகத்தான் இருக்கும். காரணம் கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

சுமார் 5500 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இதுவரை நடந்த யுத்தங்களின் மொத்த எண்ணிக்கை 14500. இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 364 கோடி.(இதில் பல லட்ச, சொச்சங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.) இந்த அழிவுக்கான மொத்தச் செலவு 50 லட்சம் கோடிகளுக்கு மேல் என்றால் நாம் அழிவுப்பாதையில் எந்த வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அந்தக் காலத்தில் அதாவது இந்த யுத்தங்கள் நடந்து முடிந்த காலகட்டங்களில், ஒரு வீட்டுக்கல்ல, ஒரு நாட்டுக்கல்ல இந்த உலகம் முழுவதற்கும் ஒரு ஆண்டுக்கு ஆன மொத்தச் செலவே ஒரு லட்சம் கோடிதான் . ஆனால் நம்மை நாமே அழிப்பதற்காக 50 லட்சம் கோடிகளைச் செலவு செய்திருக்கிறோம். வேதனைப்பட வேண்டிய விஷயமல்லவா இது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியை ஆண்ட மாமன்னன் ஜூலியஸ் சீசர் தான் நடத்திய யுத்தத்தில் ஒரு எதிரி என்ற பேர்வையில் ஒரு உடன் பிறவா சகோதரனைக் கொல்ல அவன் செலவழித்த தொகை வெறும் 75 பைசாதான். ஆனால் அதற்குப் பின் கி.பி.1800ல் நெப்போலியன் நடத்திய யுத்தத்தில் ஒரு மனித உயிரைக் கொல்ல ஆனச் செலவு ரூ.24000.

முதலாவது உலகப்போரில் ஒரு மனித உயிரைக் கொல்ல அமெரிக்கா செலவழித்தது ரூ.168000. அதன் பிறகு நடந்த இரண்டாவது உலகப்போரில் ஒரு மனித உயிரைக் கொல்ல அதே அமெரிக்காவின் செலவு ரூ16 லட்சம். பார்த்தீர்களா! வெறும் 75 பைசா 24000ரூபாயாகி 168000ரூபாயாகி கடைசியில் 16 லட்சமாகிவிட்டது. ஆனால் இன்று இந்தச் செலவு கோடிகளாகிவிட்டது எனலாம்.

இன்றைய குண்டர்களும் கொலைகாரர்களும் தீவிரவாதிகளும் மனித உயிர்களைக் கொல்ல வாங்கும் பணம் பலகோடி ‘பவர்கட்’ ரகசியம். இப்படி நம்மோடு ஒருவராக வாழும் ஒரு சகோதரனைக் கொல்ல வருங்காலத்தில் பல நூறுகோடிகளைக் கூடச் செலவழிப்பார்கள்.

இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக் கொண்டு மக்கள் தொகையை உற்பத்தி செய்து பெருக்குவதுபோல் பல நாடுகளும் அணு ஆயுதங்களையும் போர்க்கருவிகளையும் உற்பத்தி செய்து குவிக்கின்றன். இவையெல்லாம் யாரைத் தாக்குவதற்காக? எந்த உலகத்தை அடிமைப்படுத்தி ஆள்வதற்காக? எல்லாம் நம்மை நாமே அழித்துக் கொள்வதற்காகத்தான்.

சரி ஒரு வேளை மூன்றாம் உலகப்போர் வருகிறதென்றே வைத்துக் கொள்வோம். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். என்ன நடக்கும் என்று. இரண்டு சிறு பயல்கள் (லிட்டில் பாய்ஸ் - நாகசாகி, ஹிரோஷிமா) தாக்கிய தாக்குதலே இன்னும் நெஞ்சை உலுக்கிக் கொண்டிருக்கிறது. அந்த தாக்குதலின் சுவடுகள்கூட இன்னும் அழியவில்லை. ஆனால் இப்பொழுது பல நாடுகளும் தடிப்பயல்கள் போல் பெரிய பெரிய அணுக்குண்டுகளை அல்லவா குவித்து வைத்திருக்கிறார்கள்.

ரஷ்யாவில் தயாரித்து வைத்திருக்கும் ஒரு சக்தி வாய்ந்த அணுக்குண்டை வெடித்தால் அதன் அதிர்வு பூமி தன்னைத் தானே ஒருமுறை சுற்றி வருமுன்பு மூன்றுமுறை பூமியைச் சுற்றி வந்துவிடுமாம். ‘இதென்ன பிரமாதம் இதைவிட சக்தி வாய்ந்த அணுக்குண்டை எல்லாம் நாங்களும் வைத்திருக்கிறோம்ல. அதைப் போட்டால் இன்னும் அதிரும்ல’ என்று மனதுக்குள் சில நாடுகள் இறுமாப்புக் கொள்கின்றன.

அப்படி மூன்றாம் உலகப்பேர் வந்து இந்த சக்திமிகுந்த அழிவு சக்திகள் பயன் படுத்தப்படுமேயானால் என்னவாகும். பூமி துளைத்தெடுத்தக்கப்பட்டு சல்லடையாகி, எல்லாம் கரிக்காடாக அல்லவா காட்சியளிக்கும். அதன்பின்பு யார் யாரை ஆளப்போகிறார்கள்?. எந்த உலகத்தை ஆளப்போகிறார்கள்?.

குவிந்து கிடக்கும் சடலங்களுக்குத் தலைவனாக, சுடுகாடு எனும் சாம்ராஜ்யத்திற்கு சக்கரவர்த்தியாக, மனித எலும்புகளை சிம்மாசனமாக்கி, அட்டினக்கால் தோரணை போட்டு இந்த உலகத்தை ஆளப்போகும் அந்த மாமனிதன் யார்?.

அப்படியே இது சரித்திரமானாலும் அதை எழுதுவதற்கோ அல்லது படிப்பதற்கோ மனித உயிர் எதுவும் மிஞ்சியிருக்குமா?

இப்பொழுது சொல்லுங்கள். மனித உயிர் மலிவானதா? மகத்தானதா?


கனிஷ்கா, தென்காசி .

காஷ்மீர் பிரச்சனை : மதமா? அரசியலா?

இந்தியா சுதந்திரம் பெற்ற போது, இங்கு 500 குறுநில அரசுகள் இருந்தன. இந்த குறுநில அரசுகளுக்கு மூன்று வகையான வாய்ப்புகள் வழங்கப்பட்டன: 1. இந்தியாவுடன் இணைவது 2. பாகிஸ்தானுடன் இணைவது 3. தற்சார்புடன் இருப்பது. அந்த அரசுகளின் பரப்பளவு மற்றும் அந்தந்த மக்களின் விருப்பம் சார்ந்து முடிவுகள் எடுக்க, சில விதிமுறைகள் வகுக்கப்பட்டன. ஏறக்குறைய அனைத்து அரசுகளும் தங்கள் முடிவுகளை விரைவாக எடுத்துவிட்ட போதும், அய்திராபாத் மன்னரும், ஜுனாகர் -காஷ்மீர் மன்னர்களும் தயக்கம் தெரிவித்தனர். அய்தராபாத் மற்றும் ஜுனாகர் அரசுகள் ராணுவ நடவடிக்கையின் மூலம் இணைக்கப்பட்டன.

ஜம்மு -காஷ்மீர், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக (80 சதவிகிதம்) வசிக்கும் மாநிலமாகும் எனவே, காஷ்மீரின் மன்னர் அரிசிங் தற்சார்புடன் இருக்கவே முடிவு செய்தார். அவர் காஷ்மீரை ஆசியாவின் சுவிட்சர்லாந்தாக மாற்ற வேண்டும் என்கிற கனவுடன் இருந்தார். அவர், பாகிஸ்தான்-இந்தியா ஆகிய இரு தேசங்களையும் பொறுத்திருக்கும்படி கேட்டுக்கொண்டார் (நடவடிக்கைகளை நிலுவையில் வைக்கும்படி). அதனை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்ட போதும், இந்தியா மறுத்தது. காஷ்மீர் பிரச்சனை குறித்த எந்தத் தீர்வையும் எட்டுவதற்கு முன்னரே, பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமித்தது.

பழங்குடியினரின் போர்வையில் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீருக்குள் நுழைந்தது. இந்த நிகழ்வுக்குப் பின்னர் நடைபெற்ற சம்பவங்களில், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஷேக் அப்துல்லா முக்கியப் பங்காற்றினார். காஷ்மீர் மன்னர் தன் தூதுவர்கள் மூலம் ராணுவத்தை அனுப்பி, தன்னுடைய தேசத்தை மீட்டுத்தரும்படி இந்தியாவிடம் கேட்டுக் கொண்டார். இந்திய ராணுவம் வந்து தலையிடுவதை ஷேக் அப்துல்லா உறுதிப்படுத்தினார்.

‘காஷ்மீருடன் ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாத நிலையில், அங்கு ராணுவத்தை அனுப்ப இயலாது' என நேரு அறிவித்தார். காஷ்மீருடன் எந்த சட்டத் தொடர்பும் அப்போது இந்தியாவுக்கு இல்லை. அந்த மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் சட்டப்பிரிவு 370 இன் கீழ் இணைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த இணக்க ஒப்பந்தத்தின் படி, இரண்டு தலைவர்கள் -இரண்டு அரசியல் அமைப்புகள். அதன்படி காஷ்மீரின் ராணுவம், பாதுகாப்பு, வெளியுறவு, தொலைத்தொடர்பு, நாணயம் ஆகியவற்றை இந்தியா பார்த்துக் கொள்ளும். மாநில சட்டமன்றம் மற்ற பிரச்சனைகளைப் பார்த்துக் கொள்ளும். இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் காஷ்மீருக்குப் பொருந்தாது. ஏனெனில், காஷ்மீருக்கு சொந்தமான அரசியல் அமைப்புச் சட்டம் இருந்தது. இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில்தான் இந்தியா ராணுவத்தை அனுப்பியது.

ஆனால் இந்த நேரத்தில், காஷ்மீரின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தது. பொதுமக்களுக்கு சங்கடங்கள் உயிர் சேதங்கள் ஏற்படாதவாறு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த பிரச்சனை அய்க்கிய நாடுகள் அவைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அய்.நா.வின் தீர்மானத்தின்படி, இரு நாட்டு ராணுவங்களும் வெளியேற்றப்பட்டு, அதன் பிறகு அங்குள்ள பொதுமக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால் கருத்துக்கணிப்பை இன்றுவரை நடத்த முடியவில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை ‘சுதந்திர காஷ்மீர்' என அறிவித்தது. அந்தப் பகுதிக்கு பிரதமரையும் அமைப்பு விதிகளையும் அறிவித்தது.

ஜன சங்கம் மற்றும் பல தேசிய சக்திகள் காஷ்மீரின் தனித்தன்மையை மட்டுப்படுத்தி, இந்தியாவுடன் இணைந்திடுமாறு இந்திய அரசை வற்புறுத்தின. ஆனால், பிரதமர் ஷேக் அப்துல்லா இந்தியா கொடுத்த அழுத்தங்களுக்குப் பணிய மறுத்தார். எனவே அரசெதிர்ப்பு செயல் -தேசத் துரோகம் ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டு, 17 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தக் காலத்தில் தான் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. ‘காஷ்மீர் பிரதமர்' என்கிற பதவி ‘காஷ்மீர் முதல் அமைச்சர்' என்றும், ‘சர்தார் -இ -ரியாசத்' என்கிற பதவி ‘ஆளுநர்' பதவியாகவும் மாற்றம் பெற்றது. மெல்ல இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் காஷ்மீரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. காஷ்மீரின் விவகாரங்களை மத்திய அரசு கண்காணிக்கத் தொடங்கியது. அங்கு இருந்த ஜனநாயகம் சார்ந்த நடவடிக்கைகள் மெல்ல வலுவிழக்கத் தொடங்கின.

இன்றுவரை மத்திய அரசு மற்றும் அங்குள்ள மாநில ஆட்சியாளர்கள் உள்ளூர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்களாக இல்லை. 1984 இல் பரூக் அப்துல்லா பதவி நீக்கம் செய்யப்பட்டார். 1987 தேர்தல்கள் நியாயமாக நடைபெறவில்லை. இவை அனைத்தும் காஷ்மீர் வாழ் மக்களிடையே பெரும் வெறுப்புணர்வை ஏற்படுத்தியது. இளைஞர்கள் மெல்ல வன்முறையின் பால் ஈர்க்கப்பட்டனர். இது, காஷ்மீர் மக்களைப் பெரிதும் அந்நியப்படுத்தியது. ஜனநாயக நடைமுறைகள் செயலிழக்க, ஜனநாயக நடைமுறைகளுக்குப் பல தடைகள் ஏற்பட்ட பின்னணியில் தான் அங்கு தீவிரவாதம் தலைதூக்கியது.

அங்கு நிலவிய அதிருப்தியான மனநிலை, தீவிரவாதத்திற்கு ஆதரவாக திசைமாறியது. பாகிஸ்தான் இதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. பாகிஸ்தான் தனது தீவிரவாதப் படைகளை காஷ்மீருக்கு அனுப்பி நிலவரத்தை மேலும் சிக்கலாக்கியது. மீண்டும் பரூக் அப்துல்லா ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கூட, மத்திய அரசு மதிக்கவில்லை என்பதை இது தெளிவுபடுத்தியது. இந்த நிலைக்கு மற்றொரு காரணம், காஷ்மீரில் அல் கொய்தாவின் நுழைவு. ரஷ்யாவிற்கு எதிராக கிளர்ச்சிகள் செய்ய அமெரிக்கா அனுப்பிய அல்கொய்தா படைகளின் ஒரு பகுதி, அங்கு பணியை முடித்துவிட்டு காஷ்மீருக்குள் நுழைந்தது.

1980களில் இந்தியாவில் நிலவிய மதவாத சூழல், காஷ்மீரில் மேலும் வன்முறை வளர காரணமாக அமைந்தது. காஷ்மீர் பண்டிதர்கள் மற்றும் காஷ்மீரில் வாழும் முஸ்லிம்கள் இடையே நிலவிய சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து அங்கும் மதவாத சக்திகள் தங்கள் பணியைத் தொடங்கின. இது, மேலும் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக அமைந்தது. சில பயங்கரவாதிகள் இந்துக்கள் மீது தாக்குதல் தொடுத்து அவர்களிடையே அச்சத்தை விதைத்தனர்.

காஷ்மீரின் ஆளுநர் ஜக்மோகன், ‘காஷ்மீரில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் பயங்கரவாதிகளே' என்கிற அடிப்படையில் செயல்பட்டார். பண்டிதர்கள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறினால் தான் தீவிரவாதிகளை ஒடுக்க இயலும் என அவர் கூறினார். அதன்படி பண்டிதர்கள் காஷ்மீரை விட்டு வெளியேற பல்வேறு போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். முஸ்லிம்களும் தலைவர்களும், இதனை தடுத்திட முழுவதுமாக முயன்றனர். ஆனால் ஆளுநர் ஜக்மோகனின் தூண்டுதலால் பண்டிதர்கள் அங்கிருந்து வெளியேறி, அகதிகள் முகாம்களில் குடியமர்த்தப்பட்டனர்.

அங்கு நிகழ்ந்த தீவிரவாத வன்முறையில் ஏராளமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, பல முஸ்லிம் குடும்பங்களும் காஷ்மீரை விட்டு வெளியேறினர். இரு நாடுகளிடையே நிலவிய பிரச்சனை தான் காஷ்மீர் நிலவரத்துக்கு மதவாத சாயத்தைப் பூசியது. காஷ்மீரின் தலைவர்களுக்கு பாகிஸ்தானுடன் இணைந்திடும் சூழல் ஏற்பட்ட பொழுதும் கூட, அவர்கள் அவ்வாறு முடிவெடுக்கவில்லை. பல்வேறு கருத்துக் கணிப்புகளின் படி, இன்றும் கூட காஷ்மீர் முஸ்லிம்கள் பாகிஸ்தானுடன் இணைய விரும்பவில்லை. இந்திய ஆட்சியாளர்களின் கொள்கைகளால் ஏற்படும் தொடர்ச்சியான அந்நியமாதல், இனக்குழுக்களின் விருப்பங்கள் நிராகரிக்கப்படுதல், தொடர்ந்து காஷ்மீர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் கவிழ்ப்பு எனப் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற பிறகும்-காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானுடன் இணைய விரும்பவில்லை.

இன்றும் காஷ்மீர் மக்களின் முக்கியக் கோரிக்கை : இணைப்பு ஒப்பந்தப்படி காஷ்மீரின் தற்சார்பைப் பேணுவது. காஷ்மீரின் பூர்வ இன தன்மையைப் பாதுகாப்பது, வன்முறைகள் நிறுத்தப்பட்டு அமைதியுடன் கூடிய வாழ்வைப் பெறுவது. பாகிஸ்தான் அரசு தனது தலையீட்டை நிறுத்துவது மற்றும் இந்திய அரசு காஷ்மீரிகளை நம்புவது. 2000 இல் "அவுட் லுக்' நடத்திய கருத்துக்கணிப்பின் படி, 74 சதவிகித மக்கள் தங்களின் காஷ்மீரி அடையாளத்துடனேயே வாழ விரும்புகின்றனர்; 16 சதவிகித மக்கள் காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரங்களுடன் கூடிய தற்சார்பு வேண்டும் என்றனர்; 2 சதவிகிதத்தினர் பாகிஸ்தானுடன் இணைய விரும்புகின்றனர். 39 சதவிகிதத்தினர் இந்திய அரசியல் அமைப்புக்கு உட்பட்டுத் தீர்வு காணவே விரும்பினர்.

1987இல் நடைபெற்ற முறைகேடான தேர்தலுக்குப் பிறகுதான் 1990இல் பயங்கரவாத நடவடிக்கைகள் நிலைப்படுத்தப்பட்டன. அங்கு நடைபெற்ற கலவரங்களில் இறந்தவர்கள் குறித்த புள்ளி விவரங்களை நாம் பார்க்க வேண்டும்.

காஷ்மீர் பண்டிதர்கள்

காஷ்மீரிலிருந்து பண்டிதர்கள் மொத்தமாக வெளியேறியது, பள்ளத்தாக்கின் மரபுக்கு நேர்ந்த பெரும் தலைக்குனிவு. புள்ளிவிவரங்களின் படி, அங்கு நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்களால் இந்துக்கள் மட்டுமே பாதிக்கப்படுவதாக கருதப்படும் கூற்றுகள் பொய்யாகின்றன. 1986இல் தான் பண்டிதர்கள் முதலில் வெளியேறத் தீர்மானித்தனர். ஆனால் நல்லிணக்கக் குழுவின் தலையீட்டால் அது நிறுத்தப்பட்டது. 1990களில் ராணுவம் காஷ்மீரில் குவிக்கப்பட்டது. ஆளுநராகப் பதவியேற்ற ஜக்மோகன் மெல்ல தனது செயல் திட்டத்தை தொடங்கினார். நல்லிணக்கக் குழுவை அவர் செயலிழக்கச் செய்துவிட்டு, அந்த குழுவிலிருந்து ஒருவரை ஜம்முவுக்கு குடிபெயரச் செய்தார் (பூரி, காஷ்மீர், ஓரியண்ட் லாங்மேன், 1974, பக்கம் 65).

பால்ராஜ் பூரி, 1990 மார்ச்சில் இவ்வாறு கூறுகிறார் : காஷ்மீரில் வாழும் முஸ்லிம்கள் மற்றும் பண்டிதர்கள் இடையில் எந்தப் பகைமை உணர்வையும் நான் காணவில்லை. ஆனால், அங்குள்ள பாதுகாப்புப் படைகளின் மனித உரிமை மீறல்கள் தான் இன்று விசாரிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம்'' (பூரி, பக்.66). அந்த நேரத்தில் பண்டிதர்கள் இடையே வன்முறையையும் அச்ச உணர்வையும் இந்து மதவாத இயக்கங்கள் ஏற்படுத்தின. காஷ்மீரைப் பற்றி ஏராளமான தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. அங்கு ஏராளமான இந்து கோயில்கள் தகர்க்கப்படுவதாக தகவல்கள் மக்கள் மனங்களில் விதைக்கப்படுகின்றன. இதில் ஒரு பகுதி மட்டும் தான் உண்மை'' (‘பிரஸ் கவுன்சில்', 1991).

http://www.keetru.com/dalithmurasu/sep08/ram_puniyani_2.php

மக்கள் தலைவர் காஸ்ட்ரோ.


ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்தியும், விடுதலைப் பெற்ற நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றும் பகைவர்களின் இடைவிடாத அழிப்பு வேலைகளிலிருந்து காத்தும் 32 ஆண்டு காலமாக ஈடுஇணையில்லாத தொண்டாற்றிய பெருமைக்குரியவர் பிடல் காஸ்ட்ரோ.

சின்னஞ்சிறிய கியூபா நாட்டினை சர்வதிகார ஆட்சியிலிருந்து மீட்பதற்காக போராடிய பிடல் காஸ்ட்ரோவும் அவரது அற்புதமான தோழன் சேகுவேராவும் உலக வரலாற்றில் உன்னதமான இடத்தை பெற்றுள்ளனர்.

காஸ்ட்ரோவின் ஆட்சியை கவிழ்க்கவும், அவரைப் படுகொலை செய்யவும் அமெரிக்க வல்லரசு இடைவிடாது முயற்சி செய்தது. உலக வல்லரசான அமெரிக்காவின் நயவஞ்சகத்தை பிடல் காஸ்ட்ரோ வெற்றிகரமாக முறியடித்தார்.

இதன் விளைவாக நடுநிலை நாடுகளின் நாயகராகப் போற்றப்பட்டார். கியூபாவின் அதிபராக ஆனபின்னும் எளிமையான மக்கள் தொண்டராகத்தான் அவர் திகழ்ந்தார். இன்னமும் திகழ்கிறார்.

இவருடைய வழிகாட்டலில் இலத்தீன் அமெரிக்க நாட்டு மக்கள் விழிப்புணர்வைப் பெற்றனர். அதன் விளைவாக இந்நாடுகளில் இருந்த பிற்போக்கு ஆட்சிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடி ஜனநாயக அரசுகளை அமைத்துக்கொண்டனர்.

கியூபா நாட்டின் அதிபர் பதவியில் சுமார் 50 ஆண்டு காலம் இருந்த பிறகு தாமாகவே முன்வந்து பதவியைத் துறந்ததின் மூலம் அவருடைய புகழ் மேலும் பலமடங்கு உயர்ந்துள்ளது.

தென்ஆப்பிரிக்க நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திய நெல்சன் மண்டேலா அந்த நாட்டின் முதல் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார். ஆனாலும் மறுமுறை அந்தப் பதவியை வகிக்க விரும்பவில்லை. தாமாகவே முன்வந்து பதவியைத் துறந்த அவரை இன்னமும் தென்னாப்பிரிக்க மக்கள் தங்களின் பாசத்திற்குரிய தேசத் தந்தையாகப் போற்றுகிறார்கள்.

பிடல் காஸ்ட்ரோவின் இந்தப் பதவி துறப்பு உலக நாடுகளில் உள்ள பல்வேறு நாட்டுத் தலைவர்களுக்கும் முன்மாதிரியாக விளங்கும் என நம்புகிறோம். எத்தனை வயதானாலும் பதவியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விடமறுக்கும் இன்றைய தலைவர்கள் பலருக்கு நடுவில் பிடல் காஸ்ட்ரோ இமயம் போல் உயர்ந்து நிற்கிறார்.

http://thatstamil.oneindia.in/art-culture/...del-castro.html

கொசோவோவின் வரலாறு

டிம் ஜூடா என்ற எழுத்தாளர் “பரம்பரை பரம்பரையாக கொசோவொவின் பிரச்சினைகளுக்கு அந் நாட்டின் மலைப் பகுதிகளே காரணமாக இருந்து வந்துள்ளன” என்று குறிப்பிடுகிறார். பல பரம்பரைகளாக கொசோவோ என்ற ஐரோப்பிய நாடு சேர்பியர்களினதும் அல்பேனியர்களினதும் கருத்து வேறுபாடுகளின் சமர்க்களமாக இருந்து வந்துள்ளது.

சேர்பிய அல்பேனிய வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் பல காலங்களாக கொசோவொவின் வரலாறு சம்பந்தமாக தத்தம் கடும் வாதங்களினை முன்வைத்து வருகிறார்கள்.

அல்பேனியர்கள் கூற்றுப்படி அவர்களே கொசோவோவின் உண்மையான குடிமக்கள். அவர்கள் இலைரியன்கள் எனப்படும் ஆதிவாசிகளின் வழிவந்தோர்களாவர்.

சேர்பியர்களோ, கி.பி.1500 களிலிருந்த அவர்களின் பல்வேறு இராச்சியங்களின் இதயப்பகுதியாக இருந்ததே கோசோவோ என்றும் அக்காலத்தில் அங்கு அல்பேனியர்கள் இருந்திருப்பின் மிகவும் அற்ப சொற்பமானவர்களே இருந்திருக்கக் கூடும் என்றும் கூறுகிறார்கள்.

மேலும் சேர்பியர்கள் தங்களின் வாதங்களுக்கும் கூற்றுகளுக்கும் சான்றுகளாக கொசோவின் பூகோள தரைக் குறிப்புக்களாக இருக்கும் பழங்கால கிறிஸ்த்தவ ஆலயங்களையும் ஆதிகால கிறிஸ்த்தவ மடாலயங்களையும் சுட்டிக் காட்டுகின்றனர்.

கொசோவொவின் வரலாற்றில் யூன் 28, 1389 எனும் திகதி மிக முக்கியம் வாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது.

சேர்பியர்களின் சரித்திரத்தின் படி, சேர்பிய இளவரசரான லாசர் என்பார் கொசோவோவிலுள்ள “கரும் பறவைகளின் வயல்” எனப்படும் “போல்யே” என்ற இடத்தில் வைத்து தனது 35,000 போர் வீர்ர்கள் கொண்ட படையினரின் உதவியுடன் கிட்டத்தட்ட 50,000 போர் வீர்ர்களைக் கொண்ட ஒட்டோமான்கள் எனப்படும் துருக்கியரை எதிர்த்து கடும் போர் புரிந்தார் என்றும், அப் போரில் இளவரசரின் படைகள் அதிக பலம் பொருந்திய ஒட்டோமான்களின் படைகளிடம் தோல்வியுற சமர்களத்திலேயே இளவரசர் லாசரும் வீரச் சாவடைந்தார் என்றும் வரலாறு கூறுகிறது.

இளவரசர் லாசரின் இழப்பு மாபெரும் தற்கொடையாகக் கருதப்படினும் அவரது தோல்வியானது துருக்கியரின் கொசோவோ மீதான ஆக்கிரமிப்பிற்கும் அவர்களின் 300 வருட கால ஆட்சிக்கும் வழிவகுத்ததென்பது என்னவோ மறுக்க முடியாததாகி விட்டது.

நவீன வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், சேர்பியர்கள் ஒட்டோமான்களிடம் கடும் தோல்வியுற்றிருப்பினும் கொசோவோ போர் என்னவோ உண்மையாக ஒரு வெற்றி தோல்வியற்ற சமநிலையிலேயே முடிவுற்றதாகக் கருதுகின்றார்கள்.

இன்றைய காலகட்டத்தில் அல்பேனியர்களும், பொஸ்னியர்களும் சேர்பியர்களுடன் சேர்ந்து இப் போரில் ஈடுபட்டனரெனவும் இன்றைய சேர்பியாவின் மற்றைய பகுதிகள் ஒட்டோமான்களெனப்பட்ட துருக்கியருக்கு ஆதரவாக களமிறங்கின எனவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது.

எப்படியோ, 19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சேர்பிய தேசியவாத மீள்விழிப்பூட்டலின் போது, சேர்பியர்களின் கற்பனைகளால் ஏற்பட்ட கோசோவோவின் மீதான பழி தீர்க்கும் வெறியில் அவர்களின் வரலாறானது இன்றுவரை தனது செல்வாக்கினைச் செலுத்தி வருகின்றது என்பது வெள்ளிடைமலை.

துருக்கியின் ஆட்சியில் சேர்பியா
1459 அளவில் கொசோவோ உட்பட முழு சேர்பியாவும் துருக்கியின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டது.

மெதுவாக ஆனால் திடமாக சேர்பிய குடிப்பரம்பல் மாற ஆரம்பித்தது. பெரும்பாலான சேர்பியர்கள் வடக்கு நோக்கி பொஸ்னியா, ஒஸ்ட்றியா, ஹங்கேரி போன்ற நிலப்பகுதிகளுக்குக் குடி பெயர்ந்து சென்றனர்.

இக் குடிப்பெயர்வினைத் தடுத்து நிறுத்தும் முயற்சி 1689 இல் தோல்வியுற குடிபெயர்ந்து செல்லும் சேர்பியர்களின் தொகை அதிகரித்தது.

அப்படி குடிபெயர்ந்து சென்ற சேர்பியர்களின் கொசோவோ வயல் நிலங்களுக்கு, பெரும்பாலாக துருக்கியரின் பரம வைரிகளாக விளங்கிய, மலைவாழ் முஸ்லீம் அல்பேனியர்களே வந்தனர்.

1878 இல் மீண்டும் சேர்பியா தன்னாதிக்கமுள்ள ஒரு சுதந்திர நாடாயிற்று. ஆனால் இன்னமும் கொசோவோ ஒட்டோமான்களின் ஆக்கிரமிப்பின் கீழாகவே இருந்த்து.

இவ்வாண்டில் தான் கொசோவோவில் மட்டுமில்லாது அனைத்து அல்பேனியர்களுக்குமான அல்பேனிய தேசியவாத மறுமலர்ச்சிக்கும் வித்திட்ட பிறைசாரன் லீக்குக்கு அத்திவாரமிடப்பட்டது.

1912 அளவில் சேர்பியாவும் மற்றைய சுதந்திர பால்க்கன் குடியரசுகளும் இணைந்து ஐரோப்பாவில் மிஞ்சியிருந்த துருக்கியின ஒட்டோமான் ஆட்சியாளர்களை வெளியேற்றினர்.

கொசோவொவின் செர்பியர்களுக்கு சேர்பிய இராணுவத்தினரின் வருகை ஒரு விடுதலையாக அமைந்தது.

ஆனால் இன்று பெரும்பான்மையினராக கொசோவோவில் இருக்கும் அல்பேனியருக்கோ அவ்வருகையானது படுகொலைகளுடனும் அழிவுகளுடனும் கூடிய மற்றுமொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே இருந்தது.

முதலாம் உலக யுத்த காலத்தில் சேர்பிய அதிகாரிகள் தாமாகவே 1915 இல் கொசோவொவை விட்டு வெளியேற அல்பேனியர்கள் 1912இல் இடம் பெற்ற நிகழ்வுகளுக்காக சேர்பிய துருப்பினரைப் பழிதீர்த்துக் கொண்டனர்.

மீண்டும் இதற்கெதிரான சேர்பிய பழிதீர்ப்பு 1918 இல் பின்னர் இருந்த யூகோஸ்லாவிய இராணுவம் திரும்பி வந்த போது இடம் பெற்றது.

சேர்பியர்களின் குடியமரும் முயற்சி
உள்நாட்டு போர் நிகழ்ந்த காலம் முழுவதும் சேர்பியர்கள் தமது குடிப்பரம்பலினை மீண்டும் கொசோவொவில் நிலைப்படுத்தும் கடும் முயற்சியினை, நில ஆக்கிரமிப்பாளர்களை அல்பேனியர்களின் நிலங்களுக்கு அனுப்புவதன் மூலம் மேற்கொண்டனர்.

ஆனால் சேர்பிய அரசாங்க அதிகாரிகள் தொடர்ச்சியாக அல்பேனியர்களின் புரட்சிகளையும் எதிர்ப்புக்களையும் இடைவிடாது சந்திக்கும் படி நேர்ந்த்து.

1941இல் கொசோவொவின் பெரும்பாலான பகுதிகள் முசோலினியின் இத்தாலிய அல்பேனியாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன.

எஞ்சியிருந்த பகுதிகள் ஜெர்மனியினராலும் பல்கேரியர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டன. நில ஆக்கிரமிப்பாளராக இருந்த சேர்பிய குடியேற்றவாசிகள் பத்தாயிரக்கணக்கில் வெளியேற்றப்பட்டனர்.

மார்ஷல் டிட்டோவின் யூகோஸ்லாவிய பங்காளிகளுக்கு அல்பேனிய இராணுவ வீர்ர்களை வேலைக்கமர்த்துவது கடினமாக இருந்த்து. ஆனால் எப்படியோ கடைசியில் போரின் பின்னர் கொசோவோ பெரிய அல்பேனியாவுடன் ஒன்று சேர உதவுவோம் என்ற உறுதி மொழியுடன் அவர்களைச் சேர்த்துக் கொண்டனர்.

ஆனால் 1945 இல் இவ்வுறுதி மொழி மீறப்பட்டது கொசோவோ அல்பேனியர்களுக்குத் தெரியவர மீண்டும் யூகோஸ்லாவிய அரசாங்கம் மீண்டும் அல்பேனிய புரட்சிகளை மீண்டும் சந்திக்க வேண்டியதாயிற்று.

1960ஆம் ஆண்டு வரையிலும் கொசோவா யூகோஸ்லாவியாவின் ஒரு மாகாணமாக கடுமையான கட்டுப்பாடுகளுக்குக் கீழ் இருந்தது. பின்னர் 1974 இல் அதற்கு யூகோஸ்லாவியாவின் மற்றைய மாநிலங்களைப் போன்று முழுமையான தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது.

ஆனால் அந்நேரம் முதல் கொசோவோவில் இருந்த சேர்பியர்கள் கொசோவோவிற்கு முழுச் சுதந்திரம் கேட்கும் அல்பேனியர்கள் தம்மைத் துன்புறுத்துவதாக கூறி முறையிடத் தொடங்கினர்.

கொசோவொவில் ஒன்பது அல்பேனியர்களுக்கு ஒரு சேர்பியர் என்ற விகிதத்திலேயே குடிப்பரம்பல் இருந்தது. இந்நிலை சேர்பியர்களுக்கு மிகவும் துன்பம் கொடுப்பதாக இருந்தது. இதற்கு சேர்பியர்கள் பலர் புலம் பெயர்ந்து சென்றமையும் அல்பேனிய பிறப்பு வீதத்தில் ஏற்பட்ட பெரும் வளர்ச்சியுமே காரணங்களாக அமைந்திருந்தன.

இம்மாதிரியான ஆத்திரங்களினை சேர்பிய கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த சிலொபொடான் மிலோசெவிக் என்பவர் பெருமளவில் திரித்துக் கூறி பெரும்பான்மை பலம் பெற்று அதிகாரத்துக்கு வந்தார். அதிகாரத்திற்கு வந்தவுடனேயே 1989 இல் கொசோவொவின் தன்னாட்சி அதிகாரத்தினைப் பறித்தார்.

மிலோசெவிக்கின் அதிரடி நடவடிக்கைகள் முன்னைநாள் யூகோஸ்லாவியாவில் பெரும் குழப்ப நிலையினைத் தோற்றுவித்து அதன் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று.

கொசோவோவின் அரசியல்/போராட்ட வளர்ச்சிகள்
இப்ராஹிம் ருகோவா என்ற அல்பேனிய தலைவரின் தலைமையின் கீழ் கொசோவோ அல்பேனியர்கள் அறநிலைப் போராட்டங்களினை மட்டும் மிலோசெவிக்கின் தலைமையில் செயற்பட்ட சேர்பியாவுக்குக் காண்பித்து ஒரு சமகால சுதந்திரக் குடியரசினை நிறுவினர்.

அனால் பின்னர் அவரின் அறநிலைக் கோட்பாட்டினை சோம்பேறித்தனத்தின் அடித்தளமெனக் கூறி எதிர்ப்போரின் தாக்குதல்களுக்கு திரு.ருகோவா இலக்காகி வந்தார்.

பின்னர் கொசோவொ விடுதலை இராணுவம் என்ற விடுதலை அமைப்பு ஆயுதமேந்திப் போராட ஆரம்பித்தது. இவ்வமைப்பில் பல கொசோவொ வாழ் அல்பேனியர்கள் இணைந்தனர்.

http://oruthakaval.com/2008/02/18/kosovo_part1/?page=2

வியட்னாம் யுத்தம்

வியாட்னாம் யுத்தத்தின்போது அமெரிக்கர்கள் மனம் மாறியதற்கு 2 சம்பவங்கள் தான் காரணம் எனச் சொல்லப்படுகின்றது. குறித்த மனிதன் ஒருவனின் படுகொலை. மற்றயது ஒரு சிறுமி ஒருத்தியின் உடல் எரிபட்ட நிலையில் அவள் ஓடியது.

http://www.youtube.com/watch?v=EvTO3SCaJcg

http://www.youtube.com/watch?v=Ev2dEqrN4i0





அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்ட வடக்கு வியட்நாம் போராளிகள்.

வியட்நாம் போரில் போராளிகளின் இழப்பே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


வீடுகளை சோதனையிடும் அமெரிக்கப் படையினர்.




அமெரிக்கப்படையினரால் கைது செய்யப்பட்ட வியட்நாம் போராளி நடத்தப்பட்ட விதம்.

இறுதியில் உறுதி தளராது போரில் வெற்றி பெற்றவர்கள் வடக்கு வியட்நாமியப் போராளிகளே.

மேலும் விபரங்கள்..

http://en.wikipedia.org/wiki/Vietnam_War

அஞ்சி நடுங்கட்டும் ஆளும் வர்க்கங்கள். கம்யூனிசப் புரட்சி வருகிறதென்று!


ரசிய சோசலிசப் புரட்சி:
நவம்பர் புரட்சி நாள் வாழ்த்துகள்!

“ஒருவர் தமது சொந்த உழைப்பின் பயனாய்ப் பெறுவதைத் தமது தனிச் சொத்தாக்கிக் கொள்ளும் உரிமையைக் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள்

ஒழிக்க வரும்புவதாய் எங்களை ஏசுகிறார்கள்…..” “பாடுபட்டுப் பெற்ற, சொந்த முயற்சியால் சேர்த்த, சுயமாய்ச் சம்பாதித்த சொத்தாம் இது!…”

“தனிச்சொத்தை ஒழித்த்தும் எல்லாச்செயற்பாடுகளும் நின்று போய்விடும், அனைத்து மக்களும் சோம்பேறித்தனத்தால் பீடிக்கப்படுவர் என்பதாய் ஆட்சேபம் கூறப்படுகிறது. இது மெய்யானால் முதலாளித்துவ சமுதாயம் நெடுநாட்களுக்கு முன்பே முழுச் சோம்பேறித்தனத்தில் மூழ்கி மடிந்திருக்கவேண்டும். ஏனெனில் முதலாளித்துவ சுமுதாயத்தின் உறுப்பினர்களில் உழைப்போர் சொத்து ஏதும் சேர்ப்பதில்லை, சொத்து சேர்ப்போர் உழைப்பதில்லை…”

“தற்போதுள்ள உங்களுடைய சமூதாயத்தில் பத்தில் ஒன்பது பங்கு மக்களுக்கு தனிச்சொத்து ஏற்கெனவே இல்லாமல் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஒரு சிலரிடத்தே தனிச்சொத்து இருப்பதற்கே காரணம் இந்தப் பத்தில் ஒன்பது பங்கானோரிடத்தே அது இல்லாது ஒழிந்த்துதான்.”

“ஆக, சமுதாயத்தின் மிகப்பெரும் பகுதியோரிடம் எந்தச் சொத்தும் இல்லாது ஒழிவதையே தனக்குரிய அவசிய நிபந்தனையாகக் கொண்ட ஒரு சொத்து வடிவத்தை ஒழிக்க விரும்புகிறோம்.

சுருங்கச் சொல்வதெனில் உங்களுடைய சொத்தை ஒழிக்க விரும்புகிறோம் என்று ஏசுகிறீர்கள். ஆம், உண்மையில் அதுவேதான் நாங்கள் செய்ய விரும்பும் காரியம்…”

“கம்யூனிஸ்டுகள் தமது கருத்துகளையும் நோக்கங்களையும் மூடிமறைக்க மனம் ஒப்பாதவர்கள். இன்றுள்ள சமுதாயத்தின் நிலைமைகள் யாவற்றையும் பலவந்தமாய் வீழ்த்த வேண்டும். அப்போதுதான் தமது இலட்சியங்கள் நிறைவேறும் என்று கம்ய்யூனிஸ்டுகள் ஒளிவுமறைவின்றி பறைசாற்றுகிறார்கள்.

அஞ்சி நடுங்கட்டும் ஆளும் வர்க்கங்கள். கம்யூனிசப் புரட்சி வருகிறதென்று!

பாட்டாளிகள் தமது அடிமைச்சங்கிலியைத் தவிர இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள். அவர்கள் வென்று பெறுவதற்கு அனைத்து உலகும் இருக்கிறது.
உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!

கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ்
கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையிலிருந்து…


http://vinavu.wordpress.com/2008/11/07/nov71/