இது எப்படி இருக்கு???

மாப்பு : எங்கடா கிளம்பிட்ட ??????????????
பாப்பு : எனக்கு செருப்பு வாங்கணும் அதுக்காக செருப்பு கடைக்கு போறேன் !!!
மாப்பு : ஹா ஹா !! நீ ஒரு விவரம் இல்லதவண்டா செருப்பு வாங்க செருப்பு கடைக்கா போவாங்க ????
பாப்பு : அப்புறம் வேற எங்கடா போவாங்க ?????????????
மாப்பு : என்கூடவா பக்கத்து தெருல ஒரு அரசியல் மீட்டிங் நடக்குது அங்க போவோம் இப்பெல்லாம் செருப்பு கடைக்காரங்களே அங்க போய் பார்த்துதான் டிசைன் பண்ணறாங்க !!!

நான் பார்த்து ரசித்த சில நெட் ஜோக்ஸ்

சர்ச்சில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. வந்திருந்தவர்களில் ஒரு
சிறுமி, தனது அம்மாவிடம் கேட்டாள்:

'அம்மா, ஏன் கல்யாணப் பொண்ணு வெள்ளைக் கலர்லே கவுன் போட்டுருக்கு?'

'வெள்ளைக் கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னைக்கு அந்த பொண்ணுக்கு
வாழ்க்கையிலே சந்தோஷமான நாள் இல்லையா? அதனால்தான் வெள்ளைக்கலர் கவுன்
போட்டுருக்கு'

'அப்ப, மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு?'



ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள்
சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப் பின்னே
நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர்
பின் ஒருவராக செல்லக் கண்டார். இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக
இருந்தது. நாய் வைத்திருந்தவரை அணுகி,

"இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த
அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?"

"முதலில் செல்வது எனது மனைவி."

"என்ன ஆயிற்று அவருக்கு?"

"எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது"

"இரண்டாவது பிணம்?"

"அது என் மாமியாருடையது. என் மனைவியைக் காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது"

உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார், "இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?"

அதற்கு அவர் சொன்னார், "வரிசையில் போய் நில்லுங்கள்"



நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார். சாப்பிட்ட
பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார். கிளம்பும் முன் சர்வரிடம்
சொன்னார், "வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப
அழகாயிருப்பே, அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு
தடவினால் உன் தலை முடியும் கருப்பாகி விடும்....." என்று சொல்ல,
குழம்பிப்போன சர்வர் கேட்டார், "சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட
சொல்றீங்க?"

நம் சர்தார்ஜி சொன்னார், " மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு
டிப்ஸ் கொடுத்தேன்"



அப்பா: எக்ஸாம் ஹால்ல போய் தூங்கிட்டு வந்துருக்கியே வெக்கமா இல்ல ?
மகன்: நீங்கதானே கேள்விக்கு பதில் தெரியலனா முழிச்சிகிட்டு இருக்காதனு
சொன்னிங்க.



"ஆடி மாத கோர்ட்டில் கேஸ் போடாதே என்று சொன்னனே!"
"என்ன ஆச்சு?"
"தள்ளுபடி ஆயிடுச்சு!"




துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே
சர்தார்ஜிகள்தான்.

முதல் சர்தார்ஜி உள்ளே அழைக்கப்பட்டார். அவரிடம் ஒரு புகைப்படம்
காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ''இவன்
ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா
எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி. சர்தார்ஜி
சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு.
ஈஸியா பிடிச்சுடலாம் சார்...''
அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்?
பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு
இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு,
அடுத்த சர்தார்ஜியை அழைத்தார்.

அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!

''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார்
அந்த சர்தார்ஜி. அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத்
துரத்திவிட்டார்.

மூன்றாவது சர்தார்ஜி வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில
விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான்
சார்!'' என்றார்.

அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த
கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன்
கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!

''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன்
கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார்
அதிகாரி.

சர்தார்ஜி சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய
முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!''

கொஞ்சம் யாலியாக இருப்போம் வாங்க......!

ஞாபக மறதி

நடுத்தர வயது மனிதர் ஒருவர் ஞாபக மறதி நோயால் அவதிப் பட்டு வந்தார். இந்த பிரச்சனைக் காரணமாக பல சிக்கல்கள் ஏற்பட்டன. .

இதனையடுத்து அவரது மனைவி டாக்டரைச் சென்று பார்க்குமாறு அவரிடம் கூறினார். அவரும் அதுபோல, டாக்டரை பார்க்க சென்றிருந்தார்.

நீண்ட நேரம் காத்திருந்த பிறகு அவர் டாக்டரை பார்க்கச் சென்றார். அங்கே இருந்தவர் அவரைப் பார்த்து வியப்படைந்து, என்ன பிரச்சனை என்னை தேடி வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு அவர், எனக்கு கொஞ்ச நாட்களாக ஞாபக மறதி பிரச்சனை இருக்கிறது அதனால்தான் வந்தேன் என்று கூறினார்.

உடனே, அந்த நபர் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நான் டாக்டர் இல்லை உங்கள் வழக்கறிஞர் என்று பதில் அளித்தார்


பல் மருத்துவர்

பல் மருத்துவர் அறையில் பெண்மணி ஒருவர் சிகிச்சைக்காக காத்திருந்தார். அவருடை முறை வந்ததும், மருத்துவரை பார்க்கச் சென்றார்.

மருத்துவர் அவரை பரிசோதனை செய்துவிட்டு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தனது கைக் கடிகாரத்தை பார்த்த டாக்டர், அந்த பெண்மணியிடம் வழக்கமாக பல்லை நான் பிடுங்கும் போது, பலமாக கத்துவீர்களே அதுபோல கத்துவீர்களா எனக் கேட்டார்.

உடனே அந்த பெண்மணி, இந்த சிகிச்சை எனக்கு பழகிவிட்டது. இப்போது பல்வலி அதிகம் இல்லை எனவே கத்தமாட்டேன் என்றார்.
அதைக் கேட்ட டாக்டர் இல்லை இல்லை இந்த முறை நீங்கள் தயவு செய்து அதுபோல் கத்துங்கள் என்றார்.

அந்த பெண்மணி புரியாமல் ஏன் என்று கேட்க, டாக்டர் எனக்கு அவசரமாக வேலை இருக்கிறது. வெளியே நிறைய நோயாளிகள் காத்திருக்கின்றனர். உங்கள் சத்தத்தை கேட்டு பாதிபேர் ஓடி விடுவார்கள் என்று பதில் அளித்தார்.


கிராமவாசி

கிராமவாசி ஒருவர்,உலக நாடுகளை சுற்றிப்பார்க்க விரும்பினார். இதற்காக அவர் பிரபல சுற்றுலா நிறுவனத்தை அணுகினார். சுற்றுலா நிறுவனம் சொன்ன கட்டணத்தை செலுத்திவிட்டு, குறிப்பிட்ட தினத்தன்று அவர் பயணமானார். முதல் நாள் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டார்.

அப்போது அவர், சுற்றுலா நிர்வாகியிடம், எப்போது சாப்பிடலாம் என்று கேட்டார். அதற்கு அந்த நிர்வாகி, காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மதிய உணவு 11 மணி முதல் 2 மணி வரையிலும், மாலை உணவு 3 மணி முதல் 6 மணி வரையிலும், இரவு உணவு 7மணி முதல் 11 மணி வரையிலும் ஓட்டலில் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
அதனைக் கேட்ட கிராமவாசி, நடுவே கிடைக்கும் ஒவ்வொரு மணி நேரத்தில் நான் எப்படி ஊர் சுற்றி பார்ப்பது என்று அலறினார்.


சூப்பர் மார்க்கெட்

சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இரண்டு வாலிபர்கள் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொண்டனர். இதற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்ட முதலாவது வாலிபர், காணாமல் போன என் மனைவியை தேடிக் கொண்டு வந்ததால் உங்களை பார்க்காமல் மோதிவிட்டேன் என்றார்.

அதற்கு இரண்டாவது வாலிபர் பரவாயில்லை என்று கூறி, நானும் காணாமல் போன என் மனைவியைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்றார். மேலும், உங்கள் மனைவி எப்படி இருப்பாள் என்று கூறுங்கள் என்று கேட்டார்.

உடனே முதலாமவர், என் மனைவி சிவப்பாக, உயரமாக இருப்பாள் என்றும் பச்சை நிற புடவை கட்டியிருப்பாள் என்றும் கூறிவிட்டு, உங்கள் மனைவியின் அடையாளத்தை கூறுங்கள் என்றார்.

அதற்கு இரண்டாமவர், அவரைப் பற்றி கவலைப்படாதீர்கள். அவர் போனால் போகட்டும். முதலில் உங்கள் மனைவியை தேடுவோம் என்றார்.


மாப்பிள்ளை

வேலை இல்லாமல் வெட்டியாக இருந்த ஒருவர் மாமியார் வீட்டிற்கே சென்று வீட்டோடு மாப்பிள்ளையாக செட்டிலாகிவிட்ட திட்டமிட்டிருந்தார்.

மாமியார் வீட்டிற்கு சென்ற அவருக்கு முதல் சில தினங்கள் ராஜமரியாதை கிட்டியது.
அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மரியாதை குறையத் தொடங்கியது. ஒரு நாள் இரவு சிற்றுண்டிக்காக பொங்கல் செய்து பரிமாறினார்கள்.

பொங்கலின் ருசியில் மயங்கிய மாப்பிள்ளை இன்னும் கொஞ்சம் கேட்டு சாப்பிட வேண்டும் என்று விரும்பினார். இருந்தாலும் வாயைத் திறந்து கேட்க கூச்சமாக இருந்தது.

இதனால் காலியாக இருந்த சாப்பாட்டு தட்டைத் தட்டிக் காண்பித்து இந்தத் தட்டு மிகவும் நன்றாக இருக்கிறதே, எங்கு வாங்கியது என்று கேட்டார்.

மாப்பிள்ளையின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட மாமியார், பொங்கல் பானையும் காலியாகத்தான் உள்ளது என்பதை சுட்டிக்காட்ட, பானையைத் தட்டி, இந்தப் பானை வாங்கிய அதே கடையில் தான் அந்தத் தட்டும் வாங்கினேன் என்றார்.

. தென்னாபிரிக்காவுக்கு IPL சென்ற கதை




இந்தியன் பிரிமியர் லீக் (IPL) இந்தியாவிலிருந்து தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்பு, எதிர்பார்ப்புக்களுக்கு இடையில் ஏப்ரல் 18 இல் போட்டிகள் தொடங்குகின்றது. IPL சார்பில் 2 ஆவது கட்ட “Twenty20′ ஏப்ரல் 10 இல் தொடங்குவதாக இருந்தது. ஆனால், இந்திய லோக்சபா தேர்தலை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகள் பலத்த எதிர்ப்புத் தெரிவித்ததால், மக்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க போட்டிகள் தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்பட்டது.



IPL நடந்து வந்த பாதை

மார்ச் 2: லோக்சபா தேர்தல் அறிவிப்பு.

மார்ச் 3: லாகூரில் இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்.

மார்ச் 4: தேர்தல் நடப்பதால் IPL தொடருக்குத் துணை இராணுவப்படையினர் பாதுகாப்புக் கொடுப்பது கடினம் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அறிவிப்பு.
மார்ச் 5: IPL நிர்வாகம் திகதிகளை மாற்ற முடிவு.

மார்ச் 6: IPL தொடர் திட்டமிட்டபடி நடக்கும். தொடக்கவிழா ஜெய்ப்பூரிலிருந்து மும்பைக்கு மாற்றப்படுமென அதன் தலைவர் லலித் மோடி அறிவிப்பு.

மார்ச் 7: மத்திய அரசிடம் புதிய அட்டவணை கொடுக்கப்பட்டது.

மார்ச் 9: பாதுகாப்பு அறிக்கை தருமாறு மாநில அரசுகளிடம், மத்திய அரசு கேட்டது.

மார்ச் 10: பாதுகாப்புக்கு IPL. பொறுப்பேற்கும் என லலித் மோடி அறிவிப்பு.

மார்ச் 12: மாநில அரசுகள், மத்திய பாதுகாப்பு வேண்டும் என நிர்ப்பந்தம்.

மார்ச் 13: சென்னை தவிர பிற இடங்களில் பாதுகாப்புப் பிரச்சினை காரணமாக, மீண்டும் புதிய அட்டவணை வேண்டுமென மத்திய அரசு கேட்டது.

மார்ச் 14: மீண்டும் புதிய அட்டவணை தயாரித்து அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

மார்ச் 15: மாநில அரசுகளிடம் கலந்தாலோசிக்கும்படி மத்திய அரசு, IPL. இடம் தெரிவித்தது.

மார்ச் 16: பி.சி.சி. ஐ. உள்துறை அமைச்சக அதிகாரிகள் சந்திப்பு தோல்வியில் முடிந்தது.

மார்ச் 17: புதிய திகதிகளுக்கு இமாசல பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம் அனுமதியளித்தது. ஆனால், மத்திய அரசு ஓரிரு நாட்களில் முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்தது.

மார்ச் 18: மாகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா, குஜராத் என மேலும் 4 மாநிலங்கள் புதிய திகதிகளுக்கு ஒப்புதல் அளித்தன.

மார்ச் 19: வீரர்கள் பாதுகாப்பிற்கு 16 குண்டு துளைக்காத பஸ்களும், 64 கவச வாகனங்களும் வாங்க ஐ.பி.எல். சார்பில் முடிவெடுக்கப்பட்டது.

மார்ச் 20: மும்பை டி.ஜி.பி.பாதுகாப்புக் குறித்து புதிய சர்ச்சை கிளப்பினார்.

மார்ச் 21: எந்த விதமான துணை இராணுவப்படை உதவியும் வழங்க முடியாதென உள்துறை அமைச்சர் கைவிரித்தார்.

மார்ச் 22: தொடரை இங்கிலாந்து அல்லது தென்னாபிரிக்காவுக்கு மாற்ற இருப்பதாக மோடி அறிவித்தார்.

மார்ச் 23: இங்கிலாந்தில் நடத்தினால் அதிக செலவு ஏற்படும். அடுத்து நடக்கும் “Twenty20′ உலகக் கிண்ண வசூல் குறையுமென ஐ.சி.சி. பயப்பட்டது.

மார்ச் 24: IPL தொடர் தென்னாபிரிக்காவில் நடக்குமென முறைப்படி லலித் மோடி அறிவித்தார்.

உங்களுக்கும் எங்களுக்கும் என்ன வேறுபாடு?

கவிக்கோ அப்துல் ரகுமான் வடித்துள்ள கவிதையிது.

இரத்தம் வெவ்வேறு நிறம்

அங்கே பிணங்கள் விழுந்து கொண்டிருக்கின்றன
நாம் “எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன?” என்று
விசாரித்துக் கொண்டிருக்கிறோம்!
அங்கே
குண்டுகள் வெடித்துக் கொண்டிருகின்றன
நாம் பட்டாசு வெடித்துப்
பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறோம்!
அவர்கள்
வேட்டையாடப்பட்டுக்
கதறிக் கொண்டிருக்கிறார்கள்

நாம்
வெள்ளித் திரைகளுக்கு முன்
விசிலடித்துக் கொண்டிருக்கிறோம்!
அவர்கள்
கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
“கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா?”
என்று
பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறோம்!
அவர்கள்
வெளிச்சத்தின் விளைச்சலுக்கு
இரத்தம் சொரிந்துக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
இருட்டுக்காடுகளுக்கு
வேர்வை வார்த்துக் கொண்டிருக்கிறோம்!

அவர்கள்
சயனைட் அருந்திக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
அதர பானம் பருகிக் கொண்டிருக்கிறோம்!
இதில் வியப்பேதும் இல்லை
அவர்கள் கவரிமான்கள்
நாம் கவரிகள்

இதோ
தேவவேடம் போட்ட சாத்தான்கள்
வேதம் ஓதுகின்றன!
இதோ
இரத்தப் பற்களை மறைத்த ஓநாய்கள்
நீரைக் கலக்கிய பழியை
ஆடுகளின் மீது சுமத்திக் கொண்டிருக்கின்றன!

இதோ
சித்தாந்த வித்துவான்கள்
ஒப்பாரியில்
ராகப் பிழை கண்டுபிடித்துக்
கொண்டிருக்கிறார்கள்!
இதோ
வெள்ளைக்கொடி வியாபாரிகள்
விதவைகளின் புடவைகளை
உருவிக் கொண்டிருக்கிறார்கள்!

அன்று
அசோகன் அனுப்பிய
போதிமரக் கன்று
ஆயுதங்கள் பூக்கின்றது!
இன்று
அசோகச் சக்கரத்தின்
குருட்டு ஓட்டத்தில்
கன்றுகளின் இரத்தம்
பெருகிக் கொண்டிருக்கிறது!

தாய்ப் பசுவோ
கவர்ச்சியான சுவரொட்டிகளைத் தின்று
அசைபோட்டுக் கொண்டிருக்கிறது!!!

கவிக்கோ அப்துல் ரகுமான்

நினைவு படுத்தி பார்க்கிறேன் - யாழ்ப்பாணப் பொது நூலகம்


யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நிறுவனம் அதன் அரை நூற்றாண்டு நிறைவை அண்மித்துக் கொண்டிருந்தபோது மே 31 1981 எரிக்கப்பட்டுச் சாம்பலானது. இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை. இந்த நிறுவனத்துக்கான கரு கே. எம். செல்லப்பா என்னும் ஆர்வலரொருவரால் உருவாக்கப்பட்டது. நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில், சில நூல்களுடன் இவர் நடத்திவந்த நூல் நிலையமே இது. இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், செல்லப்பா அவர்களும் வேறு சில பிரமுகர்களும் இணைந்து செயல்பட்டு, இந்த நூல் நிலையத்தை யாழ் நகரின் மத்தியில் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் இதற்கென வாடகைக்குப் பெறப்பட்ட ஒரு சிறிய அறையொன்றுக்கு மாற்றினார்கள். அக்காலத்தில் சில நூறு நூல்களே இங்கிருந்தன. 1936க்குப் பின்னர், நூலகம் யாழ் நகரசபையிடம் கையளிக்கப்பட்டு, யாழ் கோட்டைக்கு அருகே, புதிதாகக் கட்டப்பட்ட நகர மண்டபத்துக்கு அண்மையிலுள்ள இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரசபை அந்தஸ்துக்குத் தரமுயர்த்தப்பட்டுப் புதிய சபை பதவியேற்றபின், இந்த நூலகத்துக்கான புதிய கட்டிடமொன்றைக்கட்டும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. பல்வேறு வழிகள் மூலம் இதற்கான நிதியைத் திரட்ட எடுத்த முயற்சிகள் பெரு வெற்றிபெற்றதாகச் சொல்லப்படுகிறது.

புத்தாண்டாம் எங்களுக்கு வாழ்த்துகிறார்கள்

வான் நிறைத்த
கரும்புகையோடு
பறிபோன தெருக்களெங்கும்
அடுக்கடுக்காய் சடலங்கள்.
சாவுகளின் ஓலமும்
சத்தமிடும் குண்டுகளும்
வாழ்ந்திருந்த நிலத்தையும்
வசந்தகாலக் கனவையும்
பறித்துக் கொண்டு........

உலகெங்கும் மரண ஓலங்களுடன் பிறக்கவிருப்பதா புத்தாண்டு????

ஸ்கைப் - பயன்படுத்துவது எவ்வாறு?


ஸ்கைப் எனப்படும் ஒரு எளிய மென்பொருள் இன்றைய தொலைதொடர்பு யுகத்தில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ளது. இந்த மென்பொருளானது VoIP எனப்படும் நவீனத் தொழில்நுட்பத்தைக் கையாள்கிறது.

நடைமுறையில் நாம் பயன்படுத்தும் தொலைபேசிக் கருவிகளை விட அதி நவீன வசதிகளைக் கொண்டதாக இருந்தாலும், பயன்படுத்தும் செலவுடன் ஒப்பு நோக்கும்போது மிக மிக மலிவானது.

நமது மடிக்கணினியில் ஸ்கைப் மென்பொருளை நிறுவி இருந்தால், நாம் எங்கெங்கு பயணம் செய்கிறோமோ, அங்கெல்லாம் ஸ்கைப் பயன்படுத்தலாம்.

இதைப் பயன்படுத்துவதற்காக உங்களிடம் ஒரு கணினி, வேகமான இணைய இணைப்பு, ஒலிப்பானுடன் கூடிய ஒலிவாங்கி, மேலும் ஒரு வெப்கேமரா தேவைப்படும்.

ஸ்கைப் இணையதளத்தில் இருந்து இந்த இலவச மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவ வேண்டும்.

ஸ்கைப் உடன் ஒரு பயனர் கணக்கைத் துவங்க வேண்டும்.

இதில் பல்வேறு இலவச சேவைகள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.

மேலும் ஸ்கைப்பில் உள்ளே / வெளியே என இரண்டு சிறப்பம்சங்கள் உள்ளன.
அவற்றை நாம் பயன்படுத்த வேண்டும் எனில் பயனர் கணக்கை உருவாக்கும்போது உங்கள் கடனட்டை பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

பேபால் தளம் மூலமாகவும் உங்களது ஸ்கைப் பயனர் கணக்கில் பணம் செலுத்தலாம்.

உங்களது பெயர், மற்றும் பிற தகவல்களை உள்ளிட்டு உங்களுக்கான கணக்கைத் துவங்கிய பிறகு மற்ற நண்பர்களது முகவரிகளை உள்ளிட்டு அவர்களை உங்களுடன் இணைத்துக்கொள்ளவும்.

இந்தச் செயல்பாட்டுக்கு நீங்கள் எதுவும் பணம் செலுத்தத் தேவையில்லை.

ஸ்கைப் வெளியே எனப்படும் சிறப்பைப் பயன்படுத்தி செல்பேசி, வீட்டுத் தொலைபேசிகளுக்குப் பேசி மகிழலாம்.

வெகுதொலைவில் உள்ளவர்களுடனும், வெளிநாட்டில் உள்ளவர்களுடனும் தொடர்புகொள்வதற்கு பணம் செலுத்த வேண்டி வரும். ஆனால் இது வழக்கத்தில் உள்ள விட்டுத் தொலைபேசி, செல்பேசிக் கட்டணங்களுடன் ஒப்பிடும்போது மிக மிகக் குறைவானதாக உள்ளது.

ஸ்கைப் உள்ளே என்கிற சிறப்பியல்பைப் பயன்படுத்தும்போது ஒரு வருடத்திற்கு எவ்வளவு சந்தாத்தொகையோ அதை ஸ்கைப் நிறுவனத்திற்குச் செலுத்தி விடவேண்டும்.

நிறுவனமானது உங்களுக்காக ஒரு தனிப்பட்ட தொலைபேசி எண்ணைக் கொடுப்பார்கள். அதை நீங்கள் வெளிநாடு வாழ் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் உங்களுடன் இலவசமாக பேசி மகிழ இது ஒரு வாய்ப்பு.

உங்களுக்கு அழைப்பு விடுப்பவர்களுக்கு பணம் செலவாகாது. ஏனெனில் நீங்கள் ஸ்கைப்பிற்கு வருடச்சந்தா செலுத்திவிட்டீர்கள். இதுவே ஸ்கைப் உள்ளே என்கிற அம்சம்.

வாய்ஸ் மெயில் வசதியும் இதில் உண்டு. ஆனால் அதற்காக மேலதிகப் பணம் செலுத்த வேண்டும்.
நீங்கள் கணினியில் இணைய இணைப்பின்றி இருக்கும்போது யாரேனும் உங்களுக்கு வாய்ஸ் மெயில் அனுப்பி இருந்தால், அதை எப்போது இணையத்துடன் இணைகிறீர்களோ அப்போதே பெற்றுக்கொள்ளலாம்.

கையடக்கக் கணினிகளுக்காகவும் தனிப்பட்ட ஸ்கைப் மென்பொருள் அதே தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அது தேவையெனில் அதையும் தரவிறக்கிப் பயன்படுத்தலாம்.

குறைந்த செலவில் அதிக நேரம் வெளி நாட்டு நபர்களுடன் பேசி மகிழ அருமையான பயன்பாடு இது.

மேலதிக விவரங்களுக்கும், மென்பொருள் தரவிறக்கத்துக்கும் நீங்கள் நாடவேண்டிய தளம் : http://www.skype.com

தொடர்புடைய சுட்டி : VoIP - இணையத் தொலைபேசி


கலைச்சொற்கள் :
ஸ்கைப் - Skype
மடிக்கணினி - Laptop
வேகமான இணைய இணைப்பு - Fast Internet Connection
ஒலிப்பான்+ஒலிவாங்கி - Head phone with Mic
வெப்கேமரா - Web camera
மென்பொருள் - Software Application
தரவிறக்கம் - Download
பயனர் கணக்கு - User Account
ஸ்கைப் உள்ளே / வெளியே - Skype In / Skype Out
கடனட்டை - Credit Card
பேபால் - Paypal
வீட்டுத் தொலைபேசி - Home based Fixed Wired / Wireless phone
செல்பேசி - Mobile / cell phone
வருடச் சந்தா - Yearly fee
வாய்ஸ் மெயில் - Voice Mail
கையடக்கக் கணினி, கருவிகள் - PDA - Personal Digital Assistant, Hand held devices

உன்னால் என்ன செய்ய முடியும்?

உன்னால் என்ன செய்ய முடியும்?
உயிரைப் பறிக்கும் நீ
உணர்வைப் பறிக்க முடியுமா?

அகதியாக்கலாம்..
அநாதையாக்கலாம்..
ஒருபோதும் அடிமையாக்க முடியாது.
இன்றைய இழப்புக்கள்
நாளை உயிர்ப்புக்களாகுமென உரமேற்றிக் கொள்கிறோம்.
கல்லறைகளே எங்கள் கருவறைகள்.
நாங்கள் என்றுமே உயிரணுக்கள்.
உருக்குலைக்க முடியாது.
எச்சரிக்கையாய் இருங்கள்.....

போதையில் மூழ்கும் இளைஞர் சமுதாயம்

நாகரீகம் என்ற போர்வையில் பல தீமைகளை நாமே தேடிக்கொள்கின்றோம். இன்று எம் இளைஞர்களில் அதிகமானோர் புகைப்பிடித்தல், போதைப்பொருட்கள் உப யோகித்தல் மற்றும் இது போன்ற பல தீமைகளை நாகரீகம் என்று பறைசாற்றிக்கொண்டு தவறான பாதைக்கு தாமாகவே இழுத்துச் செல்லப்படுவதை காணக்கூடியதாகவுள்ளது. இந்த நூற்றாண்டில், ஒரு பில்லியன் மக்கள் புகைப்பழக்கம் தொடர் பான நோய்களால் இறக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம்(WHO) தன்னுடைய ஆய்வில் கூறுகின்றது.

இன்று எமது நகர்ப்புறங்களில் நவீன உணவகம் என்ற பெயரில் நடன உணவகமாக மாறி விட்ட பல நடன விடுதிகள் இளைய சமுதாயத்தினை சீரழித்துக் கொண்டிருக்கின்றன. மெல்லிய விளக்கொளியில் இன்றைய இளைஞர், யுவதிகள் கூத்தும், கும்மாளமுமாக அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு போதைப் பொருட் களை எந்தெந்த வழியிலெல்லாம் பயன்படுத்தலாம் என்று தனி வகுப்பே நடத்தப்படுகின்றது.

மேலை நாடுகளைப் பொறுத்தவரையில் இவ்விதமான பழக்கங்கள் சிறு குழந்தைகளையும் கூட விட்டு வைக்கவில்லை. காரணம் அவர்கள் தமது வீடுகளை மதுச்சாலைகளாக ஆக்கிக் கொண்டமையேயாகும். எமது நாட்டின் சில பகுதிகளிலும் இப்பழக்கம் நடைபெறுவதை எம்மால் அறியக்கூடியதாக வுள்ளது. இதனை பார்க்கும் வீட்டில் உள்ள பிள்ளைகள் சிறு வயதிலேயே ‘குடிமக்களாக’ மாறிவிடுகின்றனர்! பெரும்பான்மையானோர் 17 வயதில் இருந்து 25 வயதுக்குள் தான் இப்பழக்கத்தை பழகுகின்றனர்.

வெளியில் தனி இடங்க ளெடுத்து தங்குவதும், நண்பர்கள் அறையை நாடிச் செல்வதும் தொழில் நிமித்தம் வெளியே செல்வதும் மதுபானம் மற்றும் போதைவஸ்துக்களை பாவிப்பதற்கும், நெறிபிறழ்வை ஏற்படுத்தக்கூடிய வகையிலான திரைப்படங் களைப் பார்ப்பதற்கும் மற்றும் புகைத்தல் போன்ற பல்வேறு தீய செயல்களில் ஈடுபடுவதற்கும் வாய்ப்பாக அமைகின்றது. இவற்றிற்கு யார் காரணம்? பெற்றோர்களே! சிந்தியுங்கள்.......

கலைஞர் - ஒரு தமிழினக் கொலைஞர்!

கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!
தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க
சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி!

சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.

சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ
கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!

பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து,
தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க
துடிக்கின்றான் சிங்களவன் அங்கே!

தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து,
ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட
தவிக்கின்றான் எங்களவன் இங்கே!

இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும்
சப்பாணிக் கழுதையே - இனி
எப்போதும் மறவாது தமிழினம் - உனை
எப்போதும் மறவாது தமிழினம்!

தமிழினம் அழிகிறது! தமிழகம் அழுகிறது!
தலைவன் நீ என்ன செய்தாய்!

தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து,
முதுமையிலும் இளமைகண்டாய்! - எங்கள்
முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!

பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான்
சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க!
எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாதெனும்
வெட்டிப் பழமொழிக்கு சான்றாக வந்துவிட்டாய்

குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! - உன்
சிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன்
சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று
உணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று!

தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன்
மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களை
உன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம்
ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்!

இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன்
அசையாத கல் மனது அசைந்திடும் என்பதாலா? இல்லை
கடுப்பேறி குமைந்திருக்கும் என் போன்ற இதயங்கள்
இளைப்பாற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திடவே!

தமிழனை குறைவாக எடைபோட்டாய்!
தமிழனுக்கு எதிராக தடை போட்டாய்!
முடிந்தது உன் ஆட்சி!
மடிந்தது உன் சூழ்ச்சி!

அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றெனும் நீதியும் நிலைக்கட்டும்!
அடிவயிறு எரிகின்ற அன்னையரின் வெப்பம் உனை
அப்படியே பொசுக்கட்டும்!
ஆதித்தமிழினம் அகிலத்தை ஆளும்!
அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்!
அன்னியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்!
அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்!

சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும்
சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் - இது
சத்தியம்! சத்தியம்! சத்தியம்!


(எனக்கு மிகவும் பிடித்த கலைஞருக்கு பிடிக்காத கவிதை.
வார்த்தைகளை செதுக்கிய அன்பருக்கு நன்றிகள்)

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள்


மூத்த தமிழனே எம் தமிழகத்தின் முதல்வனே,
எம் கண்ணீரை ஒரு கவி பாடும் உம் சங்கத் தமிழ் கொண்டு

தெருவில் நிற்கிறோம் தமிழன் என்று தலை குனிந்து
நீ ஆட்சி செய் தமிழனென்று தலை நிமிர்ந்து

சங்கம் வளர்த்த எம் தலைவனே தமிழை வார்த்த எம் வேந்தனே
எம் சாவில் ஒரு கவி பாடும் உம் சரித்திர தமிழ் கொண்டு

குண்டு மழை பெய்தபின்னர் கொலை கொலையாய் பிணங்கள் அங்கே
ஓட்டு மழை பெய்தபின்னர் வாழ்க உம் வெற்றி இங்கே

பெரியாரின் புதல்வனே பெரியாரை புகழ்ந்தவனே
எம் கதறலை ஒரு கவி பாடும் உம் பொய்யா மொழி கொண்டு

இலவச மருந்து என்றாய் மருந்தின்றி சாகிறோம் பார்
உன் தமிழை பாடும் என் தமிழ் சாதி

செம்மொழி கண்டவனே சென்கோளை வென்றவனே
எம் குமுறலை ஒரு கவி பாடும் உம் குங்குமத் தமிழ் கொண்டு

இலவச டிவி தந்தாய் உன் டிவி காட்டுது பார்
தமிழ் தாயின் குழந்தைகள் தலை இல்லா முண்டங்களாய்

நாடாளும் நாத்திகனே நாடே போற்றும் நாயகனே
எம் பட்டினியை ஒரு கவி பாடும் உம் பல்கலை தமிழ் கொண்டு

இலவச அரிசி தந்தாய் எதுவும் இன்றி சாகிறார் பார்
ஒரு மூட்டை அனுப்பிவை ஓராயிரம் தமிழனின் வாய்க்கு அரிசியாய்

மரணத்தை வென்றவனே மார்பில் தமிழை கொண்டவனே
எம் மரணத்தை ஒரு கவி பாடும் உம் மாசில்லா தமிழ் கொண்டு

இலவச அடுப்பு தந்தாய் இங்கே, அடுப்பில் பிணம் எரியுது பார் அங்கே
ஓர் அடுப்பை அனுப்பிவை தமிழ் பிணங்கள் எரியட்டும்

காப்பியங்கள் கடைந்தெடுத்தீர், தமிழை ஓவியமாய் தீட்டிவைத்தீர்
மணிமணியாய் வசனமிட்டீர், பாடல் பல படைத்துவிட்டீர்,
முத்தமிழின் கலைஞரே உன் செந்தமிழால் கவி பாடும்,
உன் முத்தமிழால் காவியம் பாடும் என் இன அழிவை அழகை படும்
நான் கேட்க வேண்டும்.

தமிழ் பிணங்களை உமக்கு பரிசளிக்கிறோம்.வாழ்க உன் புகழ் பல்லாண்டு.


கனக்கும் இதயத்தின் அனல் பறக்கும் வரிகள்
தெறிக்கும் உண்மையை செதுக்கும் கவிகள்...
படித்ததில் சிந்தனைகளை உரசிப்பார்த்த வரிகள்....