ராமர் பாலம் இருந்ததற்கு ஏராளமான ஆதாரங்கள்

ராமேஸ்வரம் கடல் பகுதியில் ராமர் பாலம் இருந்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக பெங்களூர், இந்திய அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ராமர் பாலம் குறித்து முழுமையாக ஆய்வு செய்த மையத்தின் இயக்குநர் ஹரி கூறுகையில், வால்மீகி ராமாயணத்தை முழுமையாக ஆய்வு செய்து பார்த்ததில் ராமேஸ்வரம் கடல்பகுதியில் ராமர் பாலம் கட்டியிருப்பது உண்மை என்று தெரியவருகிறது.

இந்தியா - இலங்கை இடையிலான கடல் பகுதியில் 103 குறுமலைகளை இணைத்து வானரப் படையின் உதவியுடன் 34 கிமீ தூரமுள்ள பாலத்தை ராமர் 5 நாட்களில் கட்டி முடித்தார் என்று வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு வந்த பல வெளிநாட்டு ஆய்வறிஞர்கள் இதைப் பதிவு செய்துள்ளனர். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ராமர் கட்டிய பாலத்தின் வழியாக வியாபாரிகள் 1480ம் ஆண்டுகளில் நடந்து சென்று வியாபாரம் செய்திருப்பதும் வரலாற்று புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

400 வருடங்களுக்கு முன்னர் ராமேஸ்வரம் கடல்பகுதியில் ஏற்பட்ட ஆழிப் பேரலையால் ராமர் பாலம் மூடிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இதுகுறித்து தெளிவான ஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும். ராமர் பாலம் இருந்ததற்கான ஆதாரங்களை சேகரித்து சிடியாக வெளிட்டுள்ளோம் என்றார் ஹரி.

மரண வியாபாரி' யென வர்ணிக்கப்பட்ட உலகின் முன்னணி ஆயுத வர்த்தகர் விக்ரர் போட் கைது

`கடல்கோளின் பின் இலங்கைக்கு வந்து சென்றவர்'
`மரணத்தின் வியாபாரி'யெனவும் `யுத்தப் பிரபு' என்றும் வர்ணிக்கப்பட்டவரும் உலகின் முன்னணி ஆயுத வர்த்தகர்களில் ஒருவருமான விக்ரர் போட் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவின் முன்னாள் லெப்டினன்டான விக்ரர் போட் பழைய சோவியத் ஒன்றியத்தின் விமானங்களில் லைபீரியா தொடக்கம் ஆப்கானிஸ்தான் வரையில் யுத்த களங்களுக்கு சென்று வந்தவராவார். தலிபன்கள், அமெரிக்க அரசாங்கம், ஆபிரிக்க யுத்தப் பிரபுக்கள், ஐ.நா. என்பன விக்ரர் போட்டின் வாடிக்கையாளர்களென இணையத்தளமொன்று நேற்று குறிப்பிட்டிருக்கிறது.

ஏ.கே.47 துப்பாக்கிகளுடன் சம்பந்தப்பட்ட விக்ரர் போட்டை பல வருடங்களாக சர்வதேச புலனாய்வுத் துறையினர் தேடிவந்தனர். தாய்லாந்து புலனாய்வு பிரிவினரும் பல மாதங்களாக தேடி வந்தபோதும் இறுதியில் நேற்று முன்தினம் 41 வயதான விக்ரர் போட் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கொலம்பியாவிலுள்ள இடதுசாரி பார்க் போராளிகளுக்கு ஆயுதங்கள், வெடி மருந்துகளை கொள்வனவு செய்ய அவர் முயற்சித்ததாக இந்தத் தடவை குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு எதிராக ஆறு நாடுகள் வரை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யக்கூடும்.

ஐ.நா.வின் ஆயுதத் தடைகளை மீறி அவர் செயற்பட்டதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இன்ரர் போல் அமைப்பால் அவர் தேடப்பட்டு வந்தார். அமெரிக்க ஔடத அமுலாக்கல் நிர்வாகத்திடமிருந்து பெற்ற தகவலையடுத்து தாய்லாந்து நீதிமன்றம் விடுத்திருந்த பிடியாணையின் பிரகாரம் விக்ரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

்மற்றொரு நாட்டிற்கு அநேகமாக அமெரிக்காவுக்கு அவரை நாடுகடத்துவதற்கு முன்பாக அவருக்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுக்க விரும்புகின்றோம்ீ என்று தாய்லாந்து குற்ற ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த தளபதி மேஜர் ஜெனரல் பொங்பாட் சாயாபான் தெரிவித்திருக்கிறார்.

"அவரை பல மாதங்களாக தேடி வந்தோம். தாய்லாந்துக்கு அவர் இன்று தான் திரும்பி வந்தார் என்றும் பொங்பாட் சாயாபான் கூறியுள்ளார்.

கெடுபிடி யுத்தத்தின் முடிவின் பின்னரான கதையே விக்ரர் போட்டின் கதையாகும். சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி கண்ட பின் தோற்றம் பெற்ற மூன்று விடயங்களினால் அனுகூலம் பெற்றவர் இந்த விக்ரர் போட். சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி கண்டபோது இவருக்கு வயது 25. அச்சமயம் சோவியத் விமானப் படையின் விமானங்கள், பெருந்தொகை ஆயுதங்கள், உதிரிப்பாகங்கள் என்பன மலிவாக கிடைத்தன. மிகக் குறைந்த விலையில் படையிலிருந்து விலகியவர்கள் மற்றும் அதிருப்தியாளர்களிடமிருந்து அவற்றை உலகில் மோதல்கள் இடம்பெறும் பகுதிகளுக்கு அவர் விற்பனை செய்யத் தொடங்கினார்.

எந்தவொரு அரசாங்கமோ போராளிக் குழுக்களோ ஆயுதங்களைப் பெற்றுக் கொள்ள விரும்பினால் விக்ரர் தனது அன்ரனோவ் சரக்கு விமானங்களில் ஆயுதங்களை நிரப்பிக் கொண்டு பறந்து செல்வார். திரும்பிவரும் போது வைரக்கற்கள் உட்பட பெறுமதியானவற்றுடன் திரும்பிச் செல்வார்.

அங்கோலா அரசாங்கமோ அல்லது யுனிற்ரா போராளிகளோ அல்லது ஆப்கனிலுள்ள வடக்கு கூட்டணியோ அல்லது அவர்களின் எதிரிகளான தலிபன்களோ யாராக இருந்தாலும் பணம் செலுத்தினால் அவர்களுக்கு மலிவான போக்குவரத்துக் கட்டணங்களுடன் ஆயுதங்களை வழங்கி வந்தார். 2001 இற்குப் பின்னர் அமெரிக்க அரசாங்கத்திற்காகவும் அதன் சிவில் விநியோகஸ்தர்களுக்காகவும் அவர்களின் சார்பில் ஈராக்கிற்கு கப்பலில் பொருட்களை ஏற்றிச் சென்று வழங்கினார்.

அமெரிக்காவுக்கு எவர் எதிரிகள் எவர் ஆதரவாளர் என்று உலகை அமெரிக்க ஜனாதிபதி பிரித்த போது விக்ரர் இரண்டு பக்கம் சார்ந்தவராக இருக்கிறார் என்று `மேர்ச்சன்ற் ஒவ் டெத்' `மரணத்தின் வியாபாரி' என்ற நூலின் கர்த்தாக்களான டக்ளஸ் பாரா, ஸ்ரீபன் பிரவுன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

ஐ.நா.வுக்கான சமாதானப் பணியாளர்களுடன் சோமாலியாவுக்கு அவர் சென்றிருக்கிறார். 2004 இல் கடல்கோள் அனர்த்தம் ஏற்பட்ட பின் இலங்கைக்கு உதவி வழங்குவதற்காகவும் வந்துள்ளார். அத்துடன் லைபீரியாவின் பெரும்படைத் தளபதி ஒருவருக்கு ஆயுதங்களை விநியோகித்து வருவதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரர் போட்டைப் பொறுத்தவரை அவர் ஒரு முழுமையான வியாபாரியாகும். எந்தவொரு கொள்கையும் இல்லாமல் சர்வதேச ரீதியாக போக்குவரத்தை நடத்துபவர். உதவி வழங்கும் நிறுவனங்கள் சிலவற்றைப் பொறுத்தவரை அனர்த்தங்கள் இடம்பெற்ற பகுதிகளுக்கு நிவாரணங்களை விநியோகிப்பதற்கு சிறந்த முறையில் உதவுபவராக கணிக்கப்படுகின்றார். ஆனால் பிரிட்டனின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பீற்றர் ஹெய்னைப் பொறுத்தவரை விக்ரர் ஒரு `மரண வியாபாரி' யாகும். ஆபிரிக்காவில் உள்நாட்டு யுத்தங்களை ஊக்குவிப்பவரென 2000 ஆம் ஆண்டு இவரைப் பற்றி பீற்றர் ஹெய்ன் சாடியிருந்தார்.

கற்பனைக் கதாபாத்திரங்கள் போன்றதே விக்ரரின் பாத்திரமுமாகும். அவர் தஜிகிஸ்தானில் பிறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தான் கஸ்பியன் கடலுக்கு சமீபமாகவுள்ள துர்மெனிஸ்தானை சேர்ந்தவரென விக்ரர் கூறியிருக்கிறார். ஆனால் அவர் உக்ரெய்னை சேர்ந்தவரென ஏனையோர் கூறுகின்றனர். அவரிடம் பல கடவுச் சீட்டுக்கள் உள்ளன. அவற்றில் அவரின் பெயர் பல்வேறு விதமாக உள்ளது. அவர் திருமணம் செய்திருப்பதுடன் ஒரு மகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு மொழிகளுக்கான மொஸ்கோவின் இராணுவ நிலையத்தில் அவர் கற்றுள்ளார். உஸ்பெக் தொடக்கம் பிரெஞ்சு, போர்த்துக்கல், ஆபிரிக்க மொழிகள் உட்பட பல மொழிகளை அவர் பேசும் ஆற்றல் உள்ளவர். ஆனால் ரஷ்ய உளவுப் பிரிவான கே.கி.பி.யில் தான் ஒருபோதும் இருந்ததில்லையென்று அவர் கூறியுள்ளார்.

`யார் பணம் செலுத்தினாலும் அவர் பறந்து வருவார்' எனவும் சந்தர்ப்பத்தை பயன்படுத்துபவரெனவும் தெரிவிக்கப்படுகிறது.

விக்ரரின் சேவையை அமெரிக்கா பயன்படுத்தினாலும் அவரை சி.ஐ.ஏ. இலக்கு வைத்திருக்கிறது. அமெரிக்க திறைசேரி இவரின் சொத்துக்களை முடக்கியிருந்தது. லைபீரியாவில் பல கம்பனிகள் அவர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொஸ்கோவில் வீடு இருந்தாலும் உலகம் பூராவும் தொடர்புகளை அவர் கொண்டிருந்தார். இறுதியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுவிட்டார்.

இங்கிலாந்து சிறுவனின் உயிரைக் காக்கும் வயாகரா!

லண்டன்: வாலிப, வயோதிகர்களுக்கு 'தெம்பைக்' கொடுக்கப் பயன்படும் வயகாரா, 2 வயது சிறுவனின் உயிரைக் காத்து வருகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த 2 வயது சிறுவன் ஆலிவர் ஷெர்வுட். இவனுக்கு அரிய நுரையீரல் ரத்த அழுத்த நோய் உள்ளது. இதற்காக இவனுக்கு டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்து என்ன தெரியுமா?. வயாகரா!

தினசரி நான்கு டோஸ் வயகாரா சாப்பிட்டு வருகிறான் ஷெர்வுட். இதனால் அவனது உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து தற்காலிகமாக தடுக்கப்பட்டிருக்கிறது.

ஷெர்வுட்டுக்கு வந்துள்ள நோயால் அதீத ரத்த அழுத்தம் ஏற்படும். சாதாரண மார்புத் தொற்று ஏற்பட்டாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

ஆனால் வயாகரா சாப்பிடுவதன் மூலம் அவனது ரத்த ஓட்டம் சீராக இருக்கிறது. இதுவே பெரியவர்களுக்கு எழுச்சியைத் தூண்ட உதவுகிறது.

ஆலிவர் போன்ற அரிய வியாதிக்காரர்களுக்கு இது ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்த நாளங்கள் அடைபடாமல் காக்க உதவுகிறது.

இதுகுறித்து ஆலிவரின் தாயாரும், நர்சுமான சாரா கூறுகையில், வயாகரா மிகவும் விலை உயர்ந்த மருந்து. ஆனால் நுரையீரல் ரத்த அழுத்த நோய்க்கு இது மிகவும் குறைந்த விலை மருந்தாகும் என்கிறார்.

பல்மனரி ஹைப்பர்டென்ஷன் எனப்படும் இந்த நுரையீரல் ரத்த அழுத்தத்தால், நுரையீரலில் உள்ள ரத்த நாளங்கள் விரிவடைகிறது. இதனால் இதயம் பாதிக்கப்படும். ரத்தத்தில் ஆக்சின் அளவு குறைகிறது. இதனால் மூச்சுத் திணறல், மூச்சடைப்பு ஆகியவை ஏற்படும்.

கடும் சளி, மூச்சு விடுவதில் பிரச்சினை, மூக்கிலிருந்து ரத்தம் வருவது, சோர்வு, இதய வலி ஆகியவையே இந்த நோயின் அடையாளங்கள்.

இந்த நோய் தீவிரமடையும்போது இதயம் பழுதடையும் ஆபத்து உள்ளது.

இந்த நோய் வந்தால் அதிகபட்சம் 5 ஆண்டுகள்தான் அவர்களால் உயிர் வாழ முடியும். எவ்வளவுதான் மருந்து சாப்பிட்டாலும் அந்த காலகட்டம் வரைதான் வாழ முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்.

ஆலிவர் தற்போது ஒரு சில்டெனாபில் (வயாகரா) மாத்திரையை நான்காக பிரித்து நான்கு வேளைக்கு சாப்பிடுகிறான்.

அவனது நிலைமை மோசமாகும்போது மருந்தின் அளவை டாக்டர்கள் கூட்டியாக வேண்டும். ஆனால் இது எத்தனை காலத்திற்குக் கை கொடுக்கும் என்பதை டாக்டர்களால் உறுதியாக சொல்ல முடியவில்லை.

ஆலிவர் வளர, வளர மிகவும் விலை உயர்ந்த மருந்துகளை அவன் நாட வேண்டி வரும். அப்போதுதான் உயிரைப் பிடித்து நிறுத்த முயற்சிக்கலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.

இணைய வரலாறு - ஒரு எக்ஸ்பிரஸ் பார்வை

உலகத்தின் மிகப் பெரிய இணையத் தேடியான கூகுள் இரு விசயங்களுக்காக அதிகமாக விவாதிக்கப்பட்டது.
1. அமெரிக்க அரசின் ஓர் உத்தரவிற்கு கட்டுப்பட மறுத்து, நீதிமன்றத்திற்கு சென்றது.
2. சீன அரசின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு கூகுள் தேடியில் மாறுதல் செய்தது.



1. அமெரிக்க அரசின் ஒரு உத்தரவிற்கு கட்டுப்பட மறுத்து, நீதிமன்றத்திற்கு சென்றது.

அமெரிக்க அரசு (அரசுசார் நிறுவனம்), முன்னணி தேடிகளான கூகுள் (Google), யாகூ (Yahoo) மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள், அதன் பயனாளர்கள் உபயோகப்படுத்திய 1 மில்லியன் தேடல் வார்த்தைகளைக் கொடுக்க வேண்டும் எனக் கூறியது. அந்த வார்த்தைகள், எம்மாதிரியான விசயங்களுக்காக (முக்கியமாக போர்னோகிராபி) அமெரிக்க மக்களால் தேடிகள் உபயோகப்படுத்தப்படுகின்றன் என்பது பற்றிய ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு யாகூ அரசு கேட்பதை கொடுக்க ஒப்புக்கொண்டது. ஆனால் கூகுள் மட்டும், "இது பயனாளர்களின் அந்தரங்கத்தைப் பாதிக்கும் விசயம்", எனக் கூறி கொடுக்க மறுத்தது மட்டுமல்லாமல், அரசுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்லப்போவதாகவும் அறிவித்துள்ளது. "இன்று என்ன என்ன வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டது எனக் கேட்கப்படும். இன்னும் சில நாட்கள் கழித்து, யார் யார் என்ன என்ன தேடினார்கள்? அந்த விபரங்கள் வேண்டும் எனக் கேட்டால் அதையும் கொடுக்க வேண்டிய நிலை வரும்" எனவும் வாதிடப்பட்டது.



பொதுவாக அனைத்து தேடிகளும், அவற்றிற்கு வரும் தேடல் வார்த்தைகளை (Search Queries) சேமித்து வைப்பது வழக்கம். கூகுளும் அவ்வாறே செய்து வந்துள்ளது. அரசு, இது சம்பந்தமாக ஏதேனும் கொள்கை வகுத்திருக்கிறதா என்று தெரியவில்லை. நீங்கள் ஐந்து வருடங்களுக்கு முன்பாக தேடிய விசயங்கள் கூட இன்னும் அழிக்கப்படாமல் கூகுளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அது பற்றி, சமீபத்தில் வந்த "The Google Story" என்ற புத்தகத்தின் "Porn Cookie Guy" (பக்கம் 165-ல்) அத்தியாயத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. (இந்த புத்தகம் பற்றி எழுத வேண்டும் என பல வாரங்களாக நினைத்திருந்தேன். வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனைப் பற்றி இன்னொரு நாள் எழுதுகிறேன். புத்தகம் சுமார் தான்)


"Computer users searching for pornography online may be mistaken in concluding that they are viewing it anonymously and privately. Google maintains electronic records of all searches, which can be traced back to specific computers. If someone has a Gmail account or has regiastered for any other Google Service, the firm's electronic records could be used to trace porn searches to specific individuals.

Not suprisingly, both Google and its biggest competitior, Yahoo, profit handsomely by selling sex related ads. Pornography, withing limits, is protected by the First Amendment in thw U.S. In countries where online pornography is banned, including Germany and India, Google and Yahoo abide by statutes."
அதாவது ஒவ்வொரு முறையும் கூகுள் தேடி உபயோகிக்கப்படும் போதும், தேடுபவரின் IP Address-ம், தேடக் கொடுத்த வார்த்தைகளும் சேமிக்கப்படுகின்றன. இதனைக் கொண்டு, தேடுபவரை சுலபமாக அடையாளம் காணமுடியும். அதுமட்டுமல்லாமல், Gmail-ம் இன்ன பிற சேவைகளும் (Google Services)-ம் இணைக்கப்பட்டுள்ளது, இந்த வேலையை இன்னும் சுலபமாக்குகிறது. மேலும் இந்தத் தகவல்கள் என்றுமே அழிக்கப்படுவதில்லை.

இதுவே, இப்போது கூகுளுக்கும், அதன் பயனாளர்களுக்கும் வினையாக அமைந்துள்ளது. கூகுளுக்கு இது எப்படி சிக்கலாக அமைய முடியும்? அரசு கேட்கும் விபரங்களைக் கொடுத்தால், கூகுளின் மீதான நம்பகத்தன்மை பயனாளர்களிடம் குறைந்துவிடும். ஒரு வேளை கொடுக்க மறுப்பது நம்பகத்தன்மை உயர்த்துவதற்கான முயற்சியாகக் கூட இருக்கலாம். (இது என்னுடைய யூகம் மட்டுமே)

வழக்கில் வெற்றிபெற்றால், நல்ல பெயர் கிடைக்கும். தோல்வியுற்றால், மக்களுக்கு உண்மையாக இருப்பதற்கு பாடுபட்டதற்காக மக்களிடம் மதிப்பு கூடும்.

எதற்காக கூகுள் அனைத்து தகவல்களையும் சேமித்து வைக்க வேண்டும்? அவ்வாறு செய்வதால் தானே சிக்கல்?. அரசு கேட்கும் போது, சுலபமாக "எங்களிடம் அந்த தகவல் இல்லை", என சொல்லியிருக்கலாம். அதை விடுத்து, "இருக்கிறது. ஆனால் தர இயலாது." எனக் கூறுவது வீண் வேலை தான். அப்படியென்றால் அவர்கள் அந்தத் தகவல்களை வைத்து என்ன தான் செய்கிறார்கள்?

இப்போது எட்வெர்ட் என்ற அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர், இது போல தனிநபர் பற்றிய விபரங்களை ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குப் பிறகு சேமித்து வைக்க தடை விதிக்க வேண்டும் எனக் கூறி ஒரு மசோதாவைத் தாக்கல் செய்ய முயற்சி செய்து வருகிறார். ஒரு வேளை அவரும் வில்லங்கமாக கூகுள் தேடியை உபயோகப்படுத்தியிருப்போரோ? யார் கண்டது புஷ் கூட உபயோகப்படுத்தியிருக்கலாம்.

2. சீன அரசின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு கூகுள் தேடியில் மாறுதல் செய்தது

கூகுளின் சீனத் தளத்திற்கு (google.cn), சீன அரசு சில கட்டுபாடுகளை விதித்துள்ளது. "கூகுள் தேடி, விடைகளை பயனாளர்களுக்குக் கொடுக்கும் போது, சில விடைகளை (சீனா, தைவான் அரசியல், புரட்சி சார்புடைய மற்றும் இன்ன பிற விசயங்களை) பகுத்து கொடுக்கவேண்டும்", என்பது அந்த கட்டுபாடு. இதற்கு கூகுளும், அனைவரும் ஆச்சர்யப்படும்படியாக, ஒப்புக்கொண்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பலர் அந்த நிறுவனத்தின் இரட்டை வேடத்தை எதிர்த்தும், இன்னும் பலர் அதன் வியாபாரத் தந்திரத்தை ஆதரித்தும் பேசிவருகின்றனர். இது தான் ஒரு பன்னாட்டு தேடி நிறுவனத்தின், முதல் முழுமையான சீனத் தளம். மற்ற முன்னணி நிறுவனங்களான யாகுவும், மைக்ரோசாப்ட்-ம் கூட இன்னும் முழுமையான சீனப் பதிப்பினை ஆரம்பிக்காத நிலையில், கூகுளின் முயற்சி அதன் சந்தை பங்கினை கணிசமாக உயர்த்துவதற்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.



கூகுள் google.com-ல் tiananmen square என்று தேடினால் 1989-ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தைப் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கும். அவற்றில் குறிப்பிடத்தக்கது விக்கிபீடியாவினுடையது. (விக்கிபீடியாவும், பிளாக்ஸ்பாட்டும் சீனாவில் முழுமையாக தடைசெய்யப்பட்ட தளங்கள்)

அதே சமயத்தில் www.google.cn என்ற தளத்தில் தேடினால் உங்களுக்கு அந்த சம்பவம் தொடர்பாக எந்த சுட்டியும் கிடைக்காது. இன்னும் விரிவாக 'tiananmen square 1989' என்றோ அல்லது 'Tiananmen Square' என்றோ கொடுத்தாலும், அது சம்பந்தமாக சுட்டிகள் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், சீன மக்களால் அந்த தளத்தினை பார்வையிட முடியாது. உபயம் சீன இணைய சேவை நிறுவனங்கள் (ISP).

இதே போல நீங்கள் images.google.com லும், images.google.cn லும் தேடி வித்தியாசத்தை அறியலாம்.

இப்போது கூகுள், சீனா அரசின் உத்தரவுக்குக் கட்டுபட்டு இம்மாதிரியான விசயங்களை பகுக்கிறது. நாளைக்கே, "யார் யார் 'புரட்சி', 'தைவான்' என தேடியது? அந்த விபரங்களைக் கொடுங்கள்", எனக் கேட்டால் கூகுள் என்ன செய்யும்", என சிலர் கேட்கிறார்கள். ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பத்திரிக்கையாளரின் விபரத்தை (ஒரு யாகூ மின்னஞ்சல் முகவரியை ஆதாராமாக கொண்டு), யாகூ நிறுவனம் அரசுக்குக் கொடுத்தது. அந்தத் தகவலை வைத்து, சீன அரசு அந்த பத்திரிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் தண்டனையும் விதித்தது.

ஆனால் சில சீனர்கள், "இது ஒன்றும் பெரிய விசயமே அல்ல; இந்த தடைகள் பெரிய மாறுதலையும் உண்டு செய்யப்போவதில்லை. எங்களுக்குத் தேவையான விசயங்களை Google.com-லோ அல்லது மின்னஞ்சலிலோ பெற்றுக்கொள்வோம். விக்கிபீடியா போன்ற தளங்கள், எந்த தேடியின் வழியாகச் சென்றாலும் தடை செய்ய்ப்பட்டுள்ளன. என்ன தான் கூகுள் பகுக்காத விடையை (தளத்தின் முகவரியைக்) கொடுத்தாலும் அந்த தளங்கள் முற்றிலுமாக சீனா இணைய நிறுவனங்களால் (ISP's DNS) தடைசெய்யப்பட்டுள்ளன. ஆதலால் ஒரு வித்தியாசமும் இல்லை", என்கின்றனர்.

இதற்கு ஒரு படி மேலே சென்று ஒரு சீனர்,


"சீனா ஒன்றும் அனைவரும் நினைப்பது போல் மோசமில்லை. இன்னும் சில ஆண்டுகளில் அனைத்தும் சரியாகிவிடும். அமெரிக்கர்கள் தங்களுக்கு தான் பேச்சுரிமை இருப்பதாகக் கூறிக்கொள்கிறார்கள். நீங்கள் பேசுவதை கேட்க யாருமே தயாராக இல்லையெனும் போது, பேச்சுரிமை இருந்து என்ன பயன்? சில கோடீஸ்வரர்கள் தான் (பத்திரிக்கை, டி.வி அதிபர்கள்) அமெரிக்க ஜனாதிபதியை நிர்ணயம் செய்கிறார்கள்"
என்கிறார்.

'I think those Americans think they have freedom of speech, but it's useless if when you talk nobody listens to you because a certain group of billionnaires control the media and trick the democratic process every 4 years.

போர்ட்டபிள்களை படைக்கலாம்.

போர்ட்டபிள் அப்ளிகேஸன்கள் எனப்படும் கையக மென்பொருள் பயன்பாடுகள் இப்போது மிக பிரபலம். இது பற்றிய எனது அறிமுக பதிவினை இங்கே ( போர்ட்டபிள் அப்ளிகேஷன்களின் சகா) பார்க்கலாம்.. அதாவது FireFox, Office போன்ற மொத்த மென்பொருளையும் உங்கள் கணிணியில் நிறுவாமலே USB டிரைவிலிருந்து ஓட்டலாம்.

இது போன்ற மென்பொருள்கள் பல இணைய தளங்களில் இறக்கத்துக்கு அநேகம் இருந்தாலும் தேடும் போது உங்களுக்கு தேவையான மென்பொருள் போர்ட்டபிள் அப்ளிகேஸன்களாக இறக்கத்துக்கு இல்லாமல் போகலாம். இது போன்ற வேளைகளில் நீங்களே உங்கள் அபிமான சாதாரண அப்ளிகேஷன்களை போர்ட்டபிள் அப்ளிகேஸன்களாக மாற்ற ஒரு வழியுள்ளது.
அதற்கு உதவுவது தான் Innounp (Inno Setup Unpacker). என்ன கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.



Innounp Home Page
http://innounp.sourceforge.net/

Download Innounp from here
http://downloads.sourceforge.net/innounp/innounp019.rar

இதைப்பற்றி விரிவாக அறிய: http://en.wikipedia.org/wiki/Portable_application

RapidShare-ல் கோப்புக்களைத் தேடுவது எப்படி?

ரேபிட்ஷேர் எனப்படும் "கோப்புகளின் கிடங்கில்" கிடைக்காத கோப்புகளே இருக்காது.இச்சேவை பொதுவாக நம்மிடையே கோப்புகளை எளிதாக பறிமாற்றம் செய்து கொள்ளுவதற்காக இருந்தாலும்
பெரும்பாலும் அனைத்து வகையான கோப்புகளும் இங்கு இலவசமாக காணக் கிடைக்கின்றது.ஆனால் என்ன சரியான லிங்க் தெரியவேண்டும்.உதாரணமாக இந்த லிங்க் தெரிந்திருந்தால் தான் http://www.megaupload.com/?d=TBIIUP9A சாணக்கியா நமீதா வீடியோ பாடலை நீங்கள் இறக்கம் செய்து கொள்ளலாம்

இந்த லிங்க்கானது அந்த கோப்பு சம்பந்தபட்ட ஒரு சிலருக்கு மட்டுமே தெரிவதால் பிறர் அந்த கோப்பை எளிதாக அடையமுடையாது.RapidShare-ம் தங்கள் கிடங்கில் கோப்புகளை தேடுவதற்கான வசதியை செய்து கொடுக்கவில்லை.ஆனால் இதோ ஒரு Search Engine RapidShare-ஐ எளிதாக தேட வசதி செய்து தருகிறது.
http://www.funfail.com/

மட்டுமல்லாது பிற file sharing தளங்கலான RapidShare, MegaUpload, TurboUpload, SendSpace போன்ற தளங்களையும் இது தேடி கொடுப்பதால் கூடுதல் நன்மை.(நம்மவர் யாராவது
RapidShare-ஐ தேட இன்னும் சக்தி வாய்ந்த Search Engine டெவெலப் செய்து கொண்டு வந்தால் இப்போதைக்கு நிறைய பணம் பண்ணலாம்.)

கூகிள் வழி rapidshare-ல் தேட Google -ல் இதை டைப்புங்கள்

Video files எனில்
avi|mpg|mpeg|wmv|rmvb site:rapidshare.de

Music files எனில்
mp3|ogg|wma site:rapidshare.de

Programs,Applications files எனில்
zip|rar|exe site:rapidshare.de

eBooks files எனில்
pdf|rar|zip|doc|lit site:rapidshare.com

(Optionally add the word what you are particularly looking for.
உதாரணமாக தமிழ் சம்பந்த பட்ட mp3 கோப்புகள் தேட
mp3|ogg|wma site:rapidshare.de tamil என கூகிளில் தட்டுங்கள்)

உங்கள் பெயரை எழுதிப்பாருங்கள்.

http://www.star28.net/snow.html


மேலே உள்ள இணைப்பை கிளிக் செய்து அங்கே உங்கள் பெயரை எழுதிப்பாருங்கள். அழகான பென்குயின் பறவை அசிங்கமான உங்கள் பெயரையும் அழகாக எழுதித்தருகின்றது.