மதுவால் உயர்ந்தவர்-Karan Faridoon Bilimoria


இங்கிலாந்தில் இன்று 96 மில்லியன்களுக்கு பவுண்களுக்கு மேற்பட்ட விற்பனையாகவும் 6000 உணவங்கள்,5000க்கு மேற்பட்ட மதுபானசாலைகள், பெரும்பாலும் அனைத்து மொத்த சில்லறை வியபாரநிலையங்கள் 30க்கு மேற்பட்ட நாடுகளுக்கான ஏற்றுமதியுடன் பிரித்தானியாவின் மதுபான சந்தையிலே மிகக்குறுகியகாலத்திலே தனகென்று ஒரு இடத்தை பிடித்துள்ளது கோபுரா பியர். இத்தகைய வளர்ச்சி ஒரு இரவில் நடந்தது அல்ல இத்தகைய வளர்சியை ஏற்படுத்தியவர் Karan Bilimoria ஆவார்.

எங்கே போகிறது உலகின் பொருளாதாரம்?


அமெரிக்காவின் பொருளாதாரத்திலே ஏற்பட்டுள்ள வீழ்சியினால் இன்று உலகின் பொருளாதாரத்திலும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று உணவுப்பொருட்களுக்கான விலையானது என்று இல்லாதவாறு அதிகரித்துள்ளதுடன் உணவுப்பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அரிசி மற்றும் கோதுமை,சோளம் என்பனவற்றுக்கு பெருமளவிலே தட்டுப்பாடு நிலவுகிறது. அரிசியை ஏற்றுமதி செய்கின்ற இந்தியா போன்ற நாடுகள் அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதித்துள்ளது. இலங்கையிலே அரசாங்கமானது அரிசிக்கு கட்டுபாட்டு விலை விதித்துள்ளது.

பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள்

உலக அளவில் புகழ்பெற்று அவர்கள் இறந்தும், இறவாப் புகழுடன் வரலாற்றில் இடம்பிடித்துள்ள எத்தனையோ பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள் சாதாரண மனிதர்களாகத்தான் இருந்துள்ளனர்.

இதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உள்ளன.

அதில்...வில்லியம் ஷேக்ஸ்பியர் எனும் உலக இலக்கிய மேதையின் அப்பா குதிரை லாயத்தினை பராமரித்து வருபவராக இருந்துள்ளார்.

தாமஸ் ஆல்வா எடிசனின் தந்தையோ படகு செய்து வாழ்க்கை நடத்திய ஏழையாக இருந்துள்ளார்.

பெஞ்சமின் பிராங்ளின் தந்தை மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரியாக இருந்துள்ளார்.

பெரும் ஆட்சியாளராக இருந்த ஹிட்லரின் தந்தை சாதாரண கட்டிட கூலித் தொழிலாளி.

ஆபிரகாம் லிங்கத்தின் அப்பாவோ சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டனின் அப்பா சாதாரண வியாபாரிதான்.

ஆங்கில அகராசியின் ஆசிரியரான சாமுவேல் ஜான்சனின் தந்தை மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்த புத்தக வியாபா‌ரியாவார்.

மொழிகளைத் தாண்டி உலக மக்களையே சிரிப்பில் ஆழ்த்திய சார்லி சாப்ளின் தந்தை வீட்டு வேலைக்காரராக இருந்துள்ளார்.

எனவே நாம் இருக்கும் இடம் வேண்டுமானால் கீழே இருக்கலாம். ஆனால் இருக்கப் போகும் இடம் மிக உயர்ந்ததாக இருக்க நாம் தான் முயல வேண்டும்.

பெற்றவர்களின் வழிகாட்டுதல் எத்தனை பேருக்குக் கிடைக்கும். மேற்கண்டவர்களுக்கெல்லாம் அவர்களது அப்பாக்களின் வழிகாட்டுதல் இருந்திருக்குமா என்ன? அவர்களாகவே அவர்களுக்கென ஒரு பாதையை தேர்ந்தெடுத்து அதில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளனர்.

எனவே நாமும் நமது முன்னேற்றத்திற்கான முதல் அடியை எடுத்து வைப்போம்.