. தென்னாபிரிக்காவுக்கு IPL சென்ற கதை




இந்தியன் பிரிமியர் லீக் (IPL) இந்தியாவிலிருந்து தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்பு, எதிர்பார்ப்புக்களுக்கு இடையில் ஏப்ரல் 18 இல் போட்டிகள் தொடங்குகின்றது. IPL சார்பில் 2 ஆவது கட்ட “Twenty20′ ஏப்ரல் 10 இல் தொடங்குவதாக இருந்தது. ஆனால், இந்திய லோக்சபா தேர்தலை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகள் பலத்த எதிர்ப்புத் தெரிவித்ததால், மக்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க போட்டிகள் தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்பட்டது.



IPL நடந்து வந்த பாதை

மார்ச் 2: லோக்சபா தேர்தல் அறிவிப்பு.

மார்ச் 3: லாகூரில் இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்.

மார்ச் 4: தேர்தல் நடப்பதால் IPL தொடருக்குத் துணை இராணுவப்படையினர் பாதுகாப்புக் கொடுப்பது கடினம் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அறிவிப்பு.
மார்ச் 5: IPL நிர்வாகம் திகதிகளை மாற்ற முடிவு.

மார்ச் 6: IPL தொடர் திட்டமிட்டபடி நடக்கும். தொடக்கவிழா ஜெய்ப்பூரிலிருந்து மும்பைக்கு மாற்றப்படுமென அதன் தலைவர் லலித் மோடி அறிவிப்பு.

மார்ச் 7: மத்திய அரசிடம் புதிய அட்டவணை கொடுக்கப்பட்டது.

மார்ச் 9: பாதுகாப்பு அறிக்கை தருமாறு மாநில அரசுகளிடம், மத்திய அரசு கேட்டது.

மார்ச் 10: பாதுகாப்புக்கு IPL. பொறுப்பேற்கும் என லலித் மோடி அறிவிப்பு.

மார்ச் 12: மாநில அரசுகள், மத்திய பாதுகாப்பு வேண்டும் என நிர்ப்பந்தம்.

மார்ச் 13: சென்னை தவிர பிற இடங்களில் பாதுகாப்புப் பிரச்சினை காரணமாக, மீண்டும் புதிய அட்டவணை வேண்டுமென மத்திய அரசு கேட்டது.

மார்ச் 14: மீண்டும் புதிய அட்டவணை தயாரித்து அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

மார்ச் 15: மாநில அரசுகளிடம் கலந்தாலோசிக்கும்படி மத்திய அரசு, IPL. இடம் தெரிவித்தது.

மார்ச் 16: பி.சி.சி. ஐ. உள்துறை அமைச்சக அதிகாரிகள் சந்திப்பு தோல்வியில் முடிந்தது.

மார்ச் 17: புதிய திகதிகளுக்கு இமாசல பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம் அனுமதியளித்தது. ஆனால், மத்திய அரசு ஓரிரு நாட்களில் முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்தது.

மார்ச் 18: மாகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா, குஜராத் என மேலும் 4 மாநிலங்கள் புதிய திகதிகளுக்கு ஒப்புதல் அளித்தன.

மார்ச் 19: வீரர்கள் பாதுகாப்பிற்கு 16 குண்டு துளைக்காத பஸ்களும், 64 கவச வாகனங்களும் வாங்க ஐ.பி.எல். சார்பில் முடிவெடுக்கப்பட்டது.

மார்ச் 20: மும்பை டி.ஜி.பி.பாதுகாப்புக் குறித்து புதிய சர்ச்சை கிளப்பினார்.

மார்ச் 21: எந்த விதமான துணை இராணுவப்படை உதவியும் வழங்க முடியாதென உள்துறை அமைச்சர் கைவிரித்தார்.

மார்ச் 22: தொடரை இங்கிலாந்து அல்லது தென்னாபிரிக்காவுக்கு மாற்ற இருப்பதாக மோடி அறிவித்தார்.

மார்ச் 23: இங்கிலாந்தில் நடத்தினால் அதிக செலவு ஏற்படும். அடுத்து நடக்கும் “Twenty20′ உலகக் கிண்ண வசூல் குறையுமென ஐ.சி.சி. பயப்பட்டது.

மார்ச் 24: IPL தொடர் தென்னாபிரிக்காவில் நடக்குமென முறைப்படி லலித் மோடி அறிவித்தார்.

No comments: