16 வயதில் 7 குழந்தைகள்: அதிசயிக்க வைக்கும் தாய்


பியூனோஸ் ஏரெஸ் :

பார்ப்பதற்கு, அவரது தம்பிகள், தங்கைகளை போலத் தான் தெரிகிறது. ஆனால், அவர் 16 வயதில் ஏழு குழந்தைகளுக்கு தாய். தென் அமெரிக்க நாடான, அர்ஜென்டின் தலைநகர் போனஸ் அயர்ஸ் நகரில் இருந்து 480 கி.மீ., தொலைவில் உள்ள லியோனஸ் என்ற நகரில், ஒரு விவசாய பண்ணையில் தான் பமீலா என்ற இந்த அதிசய தாய் வசித்து வருகிறார்.
இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால், பாய் பிரண்ட் மூலம், முதல் முதலாக 14 வயதில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அதற்கு பின் மேலும் இரண்டு பாய் பிரண்டுகள் பமீலாவை கவர்ந்தனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அடுத்தடுத்து நடந்த இரண்டு பிரசவங்களில், ஒவ்வொன்றிலும் தலா மூன்று குழந்தைகள் பிறந்தன.

"16 வயதில் ஏழு குழந்தைகளை பெற் றெடுத்தது, உலகிலேயே மிகவும் அபூர்வமானது' என்று, டாக்டர்கள் வியக்கின்றனர். ஆனால், குழந்தைகளின் மூன்று தந்தைகளையும் மீண்டும் சந்திக்க பமீலா விரும்பவில்லை. தற்போது, துப்புரவு தொழிலாளராக பணியாற்றும் தனது தாய் மக்டலினா, உடல் ஊனமுற்ற தந்தை ஜோசுடன் வசித்து வருகிறார். காலை 7 மணிக்கு எழுகிறார். குழந்தைகளை குளிப் பாட்டி, உணவு ஊட்டி, துணி துவைத்து, வீட்டை சுத்தம் செய்து இரவு படுக்கைக்கு செல்ல அதிகாலை 4 மணியாகிவிடுகிறது.

ஏழு குழந்தைகளையும், உடல் ஊனமுற்ற தந்தையையும் கவனித்துக் கொள்வதால், மூன்று மணி நேரம் தான் தூங்க முடிகிறது. "ஒவ்வொரு நாளும் போராட்டமாகத் தான் கழிகிறது. ஆனால், எதையும் நான் மாற்றிக் கொள்ளப்போவதில்லை. நல்ல தாயாக இருக்கவே முயற்சிக்கிறேன்' என்கிறார் பமீலா."என்னை கவரும் இன்னொரு ஆணை சந்தித்தால், அவருக்கு வாழ்க் கை துணையாக இருப்பேன். ஆனால், நிச்சயமாக இனி குழந்தை பெற்றுக் கொள்ளமாட்டேன்' என்றும் திட்டவட்டமாக கூறுகிறார் பமீலா.

பின்லேடன் தீவிரவாத பாதைக்கு திரும்பியது எப்படி? என்பது பற்றி புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு, தீவிரமாக தேடப்பட்டு வரும் அல்-கொய்தா இயக்க தலைவர் பின்லேடன் பற்றி புதிய புத்தகம் ஒன்று வெளியாகி உள்ளது. `தி பின்லேடன்ஸ்' என்ற அந்த புத்தகத்தை புலிட்சர் விருது பெற்ற ஸ்டீவ் கோல் எழுதி உள்ளார். இதில் பின்லேடன் தீவிரவாத பாதைக்கு திரும்பியது எப்படி? என்பது பற்றி புதிய தகவலை அவர் வெளியிட்டு உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

சவூதி அரேபியாவில் மிகப்பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த பின்லேடன், தனது சகோதரர்கள், சகோதரிகள் ஆகியோருடன் வசித்தார். சிறு வயதில் அவர் மத படிப்புகளில் மூழ்கி இருந்தார். அந்த நேரத்தில், அதாவது 1967-ல் அவரது 9 வயது இருக்கும்போது, அவரது தந்தை ஒரு விமான விபத்தில் பலியானார். அப்போதுதான் பல பெரியவர்கள் அவருக்கு தீவிரவாத கோட்பாடுகளை போதனை செய்தனர்.

மூத்த சகோதரர்

பின்லேடனின் மூத்த சகோதரர் சலீம். இவர் பின்லேடனைப் போல இல்லாமல், தன்னை முழுமையாக வர்த்தகத்தில் ஈடுபடுத்திக் கொண்டார். அவரது பேச்சுத் திறமை, சவூதி அரேபிய அரச குடும்பத்துடன் நெருக்கமான தொடர்பை பெற்றுத் தந்தது. அதன்மூலம் நிறைய காண்டிராக்டுகள் வந்தன. இந்த நேரத்தில் குவைத் மீது சதாம் உசேன் படை எடுத்ததால், அதை முறியடிக்க சவூதி மண்ணில் அமெரிக்க படைகள் அனுமதிக்கப்பட்டன. இதனாலும், ஓமனில் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பின்லேடன் ஆதரவு தெரிவித்ததாலும், அவருக்கும், சவூதி அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மற்றொரு பக்கம் குடும்பத்தில் கருத்து வேறுபாடு உருவானது. இதனால் அவர் சூடானில் குடிபுகுந்தார். இந்த நேரத்தில் அவரது மூத்த மகன், அவரை விட்டு பிரிந்தார். இதனால் ஏற்பட்ட தனிமை, பின்லேடனின் தீவிரவாத கொள்கைகளுக்கு மேலும் உரமேற்றி விட்டது. எனினும் மூத்த சகோதரரான சலீம், குடும்பம் சிதறி விடாமல் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். அவரை மீறி பின்லேடனால் எதுவும் செய்ய முடியவில்லை.

திடீர் மரணம்

ஆனால் 1988-ல் எதிர்பாராத விதமாக சலீம் விமான விபத்தில் பலியானார். அவரது மரணம்தான், பின்லேடனை தீவிரவாத பாதையில் முழு தீவிரத்துடன் இறங்க வழி வகுத்துள்ளது. சலீம் மட்டும் உயிருடன் இருந்து இருந்தால், அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவமே நடைபெற்று இருக்காது என்று சலீமின் பல நண்பர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

இவ்வாறு எழுத்தாளர் ஸ்டீவ் கோல் அந்த புத்தகத்தில் கூறி உள்ளார்.

PDF ஆக மாற்றுங்கள்

உங்களிடம் உள்ள பைல்களை பி.டி.எப் ஆக மாற்றுங்கள்

PDF CREATOR freeware

very easy
document files to PDF
text files to PDF

LINK:
-----
http://www.download.com/PDF-ReDirect/3000-...tml?tag=nl.e415